tamilnadu

img

மனப்பாட இயந்திரங்களை உருவாக்கும் நீட் தேர்வு

திருவண்ணாமலை,ஆக.26- ‘நீட்’ தேர்வு முறை மனப்பாட இயந்திரங்களை உருவாக்குவதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (ஆக.25)திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 12 லட்சம் நிதியை பெற்றுக்கொண்டு மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், “மருத்துவம் என்பது சேவை தொழிலாக சமூ கத்திற்கு பயன்பட்டு வரு கிறது. ஆனால், ஒன்றிய அரசு கொண்டு வந்தி ருக்கும் ‘நீட்’ தேர்வு முறை என்பது மனப்பாட இயந்தி ரங்களை உரு வாக்கும் ஒரு செயல்பாடாக உள்ளது”என்றார். “மணிப்பூர் கலவரம் குறித்து நீதிபதி சந்திர சூட் அக்கறை கொண்ட அளவுக்கு கூட பிரதமர் அக்கறை காட்டவில்லை என்றும், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் பிரா மணிய சட்டத்தை திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். “மதுரையில் நடை பெற்ற அதிமுக மாநாட்டில் மணிப்பூர் கலவரம், விலை வாசி உயர்வு,  மக்களின் வாழ்வாதாரத்தை காப்பது குறித்து எவ்வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை.  பாஜக-வை கைவிட்டு தனித்து நின்றால் மட்டுமே அதிமுக கட்சி நிலைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

என்.பாண்டி

மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி பேசிய போது, “இந்தி யும், சமஸ்கிருதமும் கற்காத தால் தமிழகத்தின் கல்வி தரம் வளரவில்லை என்று விமர்சனம் செய்கின்ற னர்.  தற்போது சந்திர னில் சந்திராயன் விண்கலங் களை வெற்றிகரமாக கொண்டு சென்றவர்கள்  தமிழக அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மயில்சாமி அண்ணாதுரை,  வீரமுத்துவேல் போன்ற வர்கள்தான்” என்றார். எரிவாயு சிலிண்டர்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு, அதானி சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வதற்கும் உதவியாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்த அவர், விவசாய உற்பத்தி சுருங்கியுள்ளது. உணவுப் பொருட்களில் தேவை அதி கரித்து வருகிறது.  இந்நிலை யில் பொது விநியோகத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது என்றும் அவர் கூறினார். அரசு பள்ளிகளில் செயல் படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தின் நிதியை குறைக்கும் செய லில் ஒன்றிய அரசு ஈடு பட்டுள்ளது.  ஆனால்,  தமிழக அரசு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. இந்த திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வேலையின்மை, அத்தி யாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி,  செப். 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் மறியலில் மக்கள் திரளாக கலந்து கொள்ளவும் பாண்டி அழைப்பு விடுத்தார். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம் .வீரபத்திரன், கே .வாசுகி, ஏ.  லட்சுமணன், என். சேகரன், எஸ். ராம தாஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.