tamilnadu

img

சிபிஎம் தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறுக!

இராமநாதபுரம், டிச.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் ஆர்.குருவேல் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நா.கலையரசன், வி.காசிநாததுரை, தாலுகா செயலாளர் கே.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், தாலுகா குழு செயலாளர்கள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சேதுராமன், தமுமுக மாவட்டச் செயலாளர் வான்தமிழ் இளம்பருதி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.