தஞ்சாவூர், டிச.6- தஞ்சாவூர் மாவட்டம் திருமண்ட குடி ஆரூரான், கடலூர் மாவட்டம் சித் தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை தராமல் ஆலையை மூடி விட்டார்கள். மேலும் கரும்பு பண பாக்கியை தரு வதற்கு வங்கிகளில் கடன் வாங்கு கிறோம் என்று சொல்லி விவசாயிகள் பெயரில் 130 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி அதையும் ஆரூரான் சர்க் கரை ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண் டது. இந்த நிலையில், வங்கிகள் கடனை கட்டுமாறு விவசாயிகளுக்கு நோட் டீஸ் அனுப்புகின்றன. இந்த நிலை யில் தேசிய கடன் தீர்ப்பாயத்திற்கு சென்ற ஆரூரான் சர்க்கரை ஆலை கள் ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுத்த வர்கள் ஆலையை செயல்படுத்தும் முன்பாக விவசாயிகள் பெயரில் வங்கி களில் பெற்ற கடனை ஆரூரான் சர்க் கரை ஆலை பெயரில் மாற்றி விவசாயி களை கடன் வலையில் இருந்து விடு விக்க வேண்டும்.கரும்பு பண பாக்கி முழுவதையும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கடந்த 7 நாட்களாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தை கரும்பு விவசாயிகள் நடத்தி வரு கின்றனர். மாநில அரசு தலையிட்டு வங்கி களின் கடன் வலையில் இருந்து கரும்பு விவசாயிகளை விடுவித்து பாதுகாத் திட வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை 43.29 கோடி ரூபாய் என 55.81 கோடி ரூபாயும், திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை 55.59 கோடி ரூபா யும், என மொத்தம் 111.40 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு தர வேண்டும். விவ சாயிகளுக்கு கரும்பு பண பாக்கி முழு வதையும் மாநில அரசு பெற்றுத் தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர்.