tamilnadu

img

அறம் நிறைந்த சூழலியலாளர்களின் கருத்துகளை முன்னெடுப்போம்! - கு.செந்தமிழ் செல்வன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

நூல் ஆசிரியர் சூழ
லியல்  எழுத்தா ளர். ஏராளமான கட்டுரை
களும் புத்தகங்களும் எழுதியுள்ளார் என்பது
அனைவரும் அறிந்ததே.
அதனால், இந்த புத்தகத்தை எடுக்கும் போதே மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சூழல்களை பற்றி தெரிந்துகொள்ள ஆவலுடனே துவங்குகிறோம்.
அந்த ஆவலை எந்த வகையிலும் குறைக்காமல் சூழலியல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் மிகத் தெளிவாக மிகச் சுருக்கமாக கொடுத்திருப்பது சிறப்பு.
முன்னுரையில் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்:
வெறும் பொழுதுபோக்கு சூழலியல் எந்த வகையிலும் உதவாது. 
இது மக்களின் குற்றமில்லை. மக்களை இயக்கும் சூழல் அரசியலின் குற்றம். ஆகவே, உண்மையான சூழல்களை அறிந்து கொள்ள அறிவியல் புரிதலும், அரசியல் தெளிதலும் அவசியம்.
இவை இல்லையெனில், பொழுதுபோக்கு சூழலியல் மட்டுமே 
மிஞ்சும். அது நம்மை காக்காது. சூழலியலாளர்களின் எச்சரிக்கையை வெறும் பூச்சாண்டிகளாக மக்கள் புரிந்து கொண்டுள்ளது கொடுமை. 
ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போதும் இது பூச்சாண்டி அல்ல என்பதை நம்மால் உணர முடிகிறது. இயற்கையின் மீது நடைபெற்றுள்ள இந்த வன்முறைகளிலிருந்து மீட்டெடுக்க இன்று துவங்கினாலும் சரிசெய்ய பல ஆண்டுகள் பிடிக்கும்.
ஆனால், இந்த சூழலியகளைப் பற்றிய புரிதலை மக்களுக்கு உணர வைக்காமல் தங்களுடைய சுரண்டலுக்கு பயன்படுத்திக் கொள்வது 
இன்றைய அரசியல் மற்றும் பெரும் முதலாளிகளின் சூழ்ச்சியாக உள்ளது. 
ஆசிரியர், தான் உணர்ந்த கருத்துகளை அவர் படித்த பல அறிஞர்களின் கருத்துகளின் துணை கொண்டு விளக்குவது சிறப்பு.      புத்தகத்தை நிறைவு செய்யும்போது குறிப்பிடுகிறார்: 
‘‘நல்வாய்ப்பாக, மக்கள் சார்பாக அறிவியல் பேசும் அறிவியலாளர்
கள் சிலர் நம்மிடம் இன்னும் மிச்சம் இருக்கிறார்கள். அவர்களால்தான் அறிவியல் உலகின் அறம் இன்றும் செயல்படுகிறது.’’ 
அந்த அறம் நிறைந்த சூழலியலாளர்களை அடையாளம் காண்பதும் அவர்களின் கருத்துகளை முன்னெடுப்பதும் இன்றைய அவசர மற்றும் அவசியத்தேவை. இந்த புத்தகத்தை எழுதுவதற்கு அறம் சார்ந்த இயற்கை சூழலியலாளர்கள் கூற்றுகளை புள்ளிகளாக வைத்து அழகிய கோலமாக வடிவமைப்பு செய்துள்ளார். 
நூல் : இயற்கை 24x7 சுற்றுச்சூழல் வழிகாட்டி
ஆசிரியர் : நக்கீரன் 
பதிப்பகம் : காடோடி பதிப்பகம்.
விலை : ரூ.170
நூல்களை வாங்க : 8072730977