tamilnadu

img

காப்பீட்டுத் தொழிலை பாதுகாக்க ஜூலை 9 வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!

காப்பீட்டுத் தொழிலை பாதுகாக்க ஜூலை 9 வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!

சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவைப் பகுதியின் 66 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் 39 ஆவது பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை கோவை ஹர்சா மஹாலில் நடை பெற்றது. மாநாட்டில் பிரதம விருந்தின ராக பங்கேற்ற அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்  செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களுக்கு எதிராக கடுமையாக விமர்சித்தார்.

தொழிலாளர் விரோத  சட்டங்களை எதிர்க்க வேண்டும்

மாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீகாந்த் மிஸ்ரா, “ஒன்றிய அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. அதனை எதிர்த்து தொழி லாளர்கள் போராட்டம் செய்யாமல் இருந் தால், போராடி பெற்ற உரிமைகளை இழக்க நேரிடும். அரசு கொண்டு வருகிற தொழிலாளர் விரோத மூன்று சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற போராட் டத்தின் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பணியாளர்களுக்கு  நீதி மறுக்கும்

அரசு “உத்தரப்பிரதேசம், ஒரிசா மற்றும்  பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஏழை தொழிலாளர்கள், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங் களின் பெருநகரங்களில் தினசரி ரூ.200 சம்பளத்தில் வேலை செய்கிறார் கள். அதே நேரத்தில் அதானி, முகேஷ்  அம்பானி போன்ற பெரிய முதலாளி களுக்கு பெரும் சலுகைகள் வழங்கப்படு கின்றன” என்று ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக் காட்டினார்.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கவலை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை சுட்டிக்காட்டிய ஸ்ரீகாந்த்  மிஸ்ரா, “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அது பற்றி  கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌன மாக உள்ளார். வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மௌனமாக உள்ளார். ஆனால் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக  பேசுகிறார். ஏற்கனவே அமெரிக்காவி லிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன” என்று கூறினார்.

விவசாயத் துறையில் நெருக்கடி

இந்திய விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்த அவர், “காஷ்மீர் மற்றும்  இமாச்சலப் பிரதேசத்தில் உரிய விலை  கிடைக்காமல் ஆப்பிள் விவசாயி கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  இந்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எம்.எஸ். சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரைத்த குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்று குறிப் பிட்டார்.

மொழி அரசியல் குறித்த விமர்சனம்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆங்கில மொழி குறித்த கருத்து களை மறுத்த ஸ்ரீகாந்த் மிஸ்ரா, “அமித் ஷா அணியும் உடைகள் முழுக்க வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை. நமது முன்னோர்கள் கரும்பு சாகு படியை கற்றுக் கொண்டனர். ஆனால் கரும்பை சர்க்கரையாக மாற்றுவது சீனாவிலிருந்து கற்றுக் கொண்டது. இப்படி வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்தையும் நாம் தவிர்க்க முடி யுமா என்பதை அமித் ஷா உணர வேண் டும்” என்று கேட்டார்.

ஒற்றுமையின் அவசியம்

தேசிய ஒற்றுமை குறித்து பேசிய அவர், “நாம் இந்தியா போன்ற ஒரு மகத் தான நாட்டைச் சேர்ந்தவர்கள். ‘நாங்கள்  இந்துக்கள்’ என்று மட்டும் சொல்லி இந்த போராட்டத்தை வெல்ல முடியாது. குஜராத்தி, மராத்தி, தமிழர் என்று பிரிந்து  போராடினாலும் வெற்றி கிட்டாது. நமது தேசியம் என்பது முழு மக்களையும் உள்ளடக்கியது. இந்து, முஸ்லிம், சீக்கி யர், கிறிஸ்தவர், தமிழர், ஒடியா, வங்காளி, மராத்தி - என அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா” என்று வலி யுறுத்தினார்.

100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுக்கு எதிர்ப்பு

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத  வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI)  எதிர்த்து பேசிய அவர், “அரசாங்கத்தை விட தேசம் முக்கியமானது. மக்களே  முதன்மை, அரசாங்கம் இரண்டாம்நிலை.  100 சதவீத FDI காப்பீடு மக்களின் நல னுக்கு எதிரானது. இந்தியா ஒரு ஜன நாயக, சோசலிச நாடாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜூலை 9 வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

உரையின் நிறைவாக, “ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இந்தப் போராட்டம் அரசுத்  துறை காப்பீட்டுத் தொழிலை பாதுகாக்க,  அரசுத் துறை நிறுவனங்கள் முழுவதை யும் காப்பாற்ற, இந்த மகத்தான நாட்டின்  பொருளாதார மற்றும் அரசியல் இறை யாண்மையை பாதுகாக்கும் நோக்கங் களுக்காகவே நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

75 ஆவது ஆண்டு நினைவு இலச்சினை வெளியீடு

மாநாட்டின் தொடக்கத்தில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெறு வதை முன்னிட்டு, 75 ஆவது ஆண்டு  நினைவு இலச்சினையை பொதுச் செய லாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார். இந்நிகழ்வில் அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்  மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத் தலைவர் சி.முத்துக் குமாரசாமி, பொருளாளர் எஸ்.சிவசுப்பிர மணியன், துணைச் செயலாளர் வி. சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.