தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் மதவெறியர்களை முறியடிப்போம்!
திண்டுக்கல்லில் இடதுசாரிக் கட்சிகள் மாபெரும் பொதுக்கூட்டம்திண்டுக்கல்லில் இடதுசாரிக் கட்சிகள் மாபெரும் பொதுக்கூட்டம்
திண்டுக்கல், ஜூன் 28 - கார்ப்பரேட் மதவாத ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள் கைகளைக் கண்டித்தும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சா ரத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜக கும்பலைக் கண்டித்தும் திண்டுக்கல் லில் இடதுசாரி கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற் றது. சனிக்கிழமையன்று மாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான ஆர். சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செய லாளர் கே பிரபாகரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன், இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி (எம்எல்-லிபரேசன்) லிப ரேசன் கட்சியின் மாவட்டச் செயலா ளர் பி.சுப்புராமன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்-லிபரேசன்) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழகத்தில் மக்கள் ஒற்றுமை யைக் குலைக்கவும், வன்முறைக் கல வரங்களை ஏற்படுத்தவும், இந்து முன்னணி - பாஜக கூட்டம் பல்வேறு சதித் திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அவை ஒருநாளும் எடுபடாது, என்றும்; நல்லிணக்கப் பாரம்பரியம் கொண்ட தமிழக மக்க ளைத் அணிதிரட்டி சங்-பரிவார் கூட் டத்தை இடதுசாரிகள் முறியடிப்பார்கள் என்றும் தலைவர்கள் தங்களின் உரை யில் குறிப்பிட்டனர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என். பாண்டி, சிபிஐ தேசியக்குழு உறுப்பி னர் க. சந்தானம், மாநில செயற்குழு உறுப்பினர் எம். ரவி. சிபிஐ (எம்எல்-லிபரேசன்) மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் பங் கேற்றனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் ஜி. ராணி நன்றி கூறினார்.