tamilnadu

img

மக்களிடம் வரவேற்பை பெற்ற திட்டத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவதா?

சென்னை, பிப். 8- பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய  உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவம் தன்னார்வலர்கள் (ஊழியர்கள்) சார்பில் தமிழக அரசின் கவன ஈர்க்கும் வகையில் பேரணி,  ஆர்ப்பாட்டம் சென்னையில் புதனன்று (பிப். 8) நடைபெற்றது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி னார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், பொருளாளர் மாலதி  சிட்டிபாபு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் பாளர் தனலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். இதில்  உதவி பொதுச் செயலாளர் கள் எஸ்.கண்ணன், திருச்செல்வன், மாநில நிர்வாகிகள் சிவாஜி, கிருஷ்ணமூர்த்தி, அய்டா ஹெலன், சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.லட் சுமி, பொருளாளர் எம்.மலர் விழி உள்ளிட்டு மாநிலம் முழு வதிலும் இருந்து 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர் இதுகுறித்து அ.சவுந்தரராசன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 1 கோடி பேருக்கு  மருந்து பெட்டகம் வழங் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 11 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் 4,500 ரூபாய் ஊக்கத் தொகை என்ற அடிப்படையில் மிக வும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இரண்டு மணி நேரம் பணி நேரம் என்று குறிப் பிட்டாலும், இல்லம் தேடி  மருந்து மாத்திரை வழங்கு வது, ஸ்கீரினிங் செய்து சர்க்கரை அளவு பரிசோதிப் பது, உயர் அழத்தம் பரிசோ திப்பது, முகாம்களில் முழு நேரம் பணியாற்றுவது, வெளி நோயாளிகள் மருத்து வம் பார்க்க உடன் இருப்பது, பிரசவ வார்டுகளில் பணியாற்றுவது மேலும்  பிறதுறைகளில் பணியாற்று வது, ரெவ்யூ மீட்டிங் செல் வது, ஸ்கோரிங் கார்டு எழுதுவது, டேட்டா என்ட்ரி  போனில் பதிவு செய்வது என முழு நாள் பணியாக  விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர். தமிழக  சுகாதாரத் துறை யில் இவர்களது பணி முக்கியமானது. எனவே தமிழ்நாடு அரசு இவர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் 26  ஆயிரம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட 18 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க பல போராட்டங்களை அனைத்து மாவட்டங் களிலும் நடத்தி, அரசிடம் 18 கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளோம். அரசு சில அறிவிப்புகளை செய்துள்ள போதும் ஊழியர்களின் கோரிக்கைகளை தனித்து பரிசீலிப்பதாக தெரி வித்துள்ளது என்றார்.  அதனடிப்படையில் பரிசீலித்து விரைவில் உரிய தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஆஷா, அங்கன்வாடி பணி யாளர்களை என அனைத்து ஊழியர்களையும், தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய போ ராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் எச்சரித்தார். பின்னர் அ.சவுந்தரராசன் தலைமையில் நிர்வாகிகள் அரசு சார்பு செயலாளர் லதாவை சந்தித்து கோரிக் கைகள் அடங்கிய மனு அளித்து பேசினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.