சென்னை, அக். 2 - அரசியல் செல்வாக்குள்ள வர்கள் மற்றும் பணபலம் படைத்தவர்கள் அப கரித்த அரசு நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கோவையில் ரூ. 230 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அரசியல் செல்வாக்கு, பணபலம் படைத்த சிலர் அபகரித்து, கட்டடம் எழுப்பியிருக்கும் நிலையில், அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அபகரிக்கப்பட்ட நிலத்தை உடனடி யாக மீட்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நில அபகரிப்பு நடந்துள்ள விதம் பெரும் அதிர்ச்சியை அளிக் கிறது. இதுபோன்று தமிழ்நாடு முழு வதும் பல அரசியல் மற்றும் பண பலம் படைத்தவர்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து ஏராளமாக பணம் சம்பாதித்துள்ளதை நீதிமன்றம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. நிலங்களின் சந்தை மதிப்பு பெருமளவு உயர்ந் துள்ள நிலையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் படைத்தவர்கள் சில அரசு அதிகாரிகளின் துணை யோடு அதிகாரத்தைத் தவ றாக பயன்படுத்தி, அரசு நிலங்களை அபகரித்து கட்டடம் எழுப்புவது, அவர்களின் பெயர்களில் பட்டா மாற்றம் செய்வது குறித்த வழக்கு கள் கடந்த சில நாட்களாக நீதிமன்றங் களில் நடைபெற்ற வண்ணம் உள் ளன. இவ்வழக்குகளில் சம் பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கள் மேற்கொள்வதோடு,
அரசு நிலங்களை பாது காக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து வந்துள்ளது. கோவில் நிலங்கள், அரசுப் புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை காலி செய்ய வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டி, அதிகாரிகள் இடித்து வேகமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். அதே சமயம், பண பலம், அதிகார பலம், அரசியல் பலமிக்கவர்கள் சட்டவிரோத மாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை அபகரித்து கட்டடங்கள் கட்டியுள்ளதையும், அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதை யும் அரசு அதிகாரிகள் கண்டும், காணா மல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, கோவை நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், இதற்கு உடந் தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்டெடுக்கவேண்டும். இதேபோல தமிழ்நாடு முழுவதும் அர சியல் செல்வாக்கு, அதிகாரம், பணபலம் படைத்தவர்கள் சட்டவிரோதமாக அரசு நிலங்களை அபகரித்திருந்தால் அந்நிலங்களை மீட்டெடுக்கவும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டு மின்றி அவர்களுக்கு துணைபுரிந்த அதி காரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.