உத்தரப்பிரதேச மாநில கும்பமேளா நிகழ்வில் ஜனவரி 29ஆம் தேதி தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி யானார்கள். 60-க்கும் மேற்பட் டோர் காயமடைந்ததாக கூறப் படுகிறது. ஆனால் உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 100ஐ நெருங்கும் என செய்தி கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கும்பமேளா வில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உத்தரப்பிரதேச பாஜக அரசு மறைக்கிறது என நாடாளுமன்றத் தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் அவர் மேலும் கூறு கையில், “ஒன்றிய அரசு தொடர்ந்து பட்ஜெட் குறித்த புள்ளிவிவரங் களை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் கும்பமேளாவில் இறந்த வர்களின் புள்ளி விவரங்களை யும் வழங்க வேண்டும். கும்ப மேளாவில் இறந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. குடியரசுத் தலைவரும், பிரதமரும் இரங்கல் தெரிவித்த 17 மணி நேரத்திற்குப் பிறகு தான் மாநில அரசு பக்தர்கள் இறப்பை தெரி வித்தது. இன்றும் மாநில அரசு உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
என்ன வகையான சனாதன பாரம்பரியம்?
கும்பமேளாவில் சிலர் உயிரி ழந்துள்ளனர் என்று தெரிந்ததும், அவர்களின் உடல்கள் சவக் கிடங்கிலும் மருத்துவமனை யிலும் கிடந்தன. ஆனால் ஹெலி காப்டரில் பூக்களை நிரப்பி திரி வேணி சங்கமத்தில் பொழிந்தனர். இது என்ன வகையான சனாதன பாரம்பரியம்? எனத் தெரிய வில்லை. அங்கு எத்தனை செருப்பு கள், உடைகள் மற்றும் புடவைகள் கிடந்தன என்பது தெரியும் ; ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் டிராலிகளைப் பயன்படுத்தி அப்பகுதியை அப்புறப்படுத்தி னர். எத்தனை பேர் தூக்கி வீசப் பட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரங்களையும் தயவுசெய்து வெளியிடுங்கள். கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கும்பமேளா நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கும்பமேளா விபத்தில் இறந்த வர்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள், மருத்து வர்கள், உணவு, தண்ணீர், போக்கு வரத்து ஆகியவற்றின் புள்ளி விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சோகத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உண்மையை மறைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என அவர் குற்றம்சாட்டினார்.