tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

குமரி மாவட்ட  ரப்பர் உற்பத்தியாளர் கலந்துரையாடல்

நாகர்கோவல். ஏப்.26- புதிய ரப்பர் விவசாயிகளுக்க புதிய ரக உரம் வழங்குதல் குறித்து கன்னியாகுமரி ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விரிவாக்க கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.  சங்க செயலாளர் பிரதீப்குமார் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் வேளாண் பண்ணை தொழிலாளர் கொண்டு புதிய தொழிலாளர் வங்கி உருவாக்குவது. ரப்பர் பால் கொள்முதல் செய்வது, புதிய ரப்பர் விவசாயிகளுக்க தரமான உரம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சங்க தலைவர் எஸ்.மனோகரன், பொருளாளர் மோகன்குமார், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை ்துணை இயக்குவர் எஸ்.கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஆர்.கீதா மற்றும் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ பிரவின் ஆகியோர் கலந்து கொண்டனர். ரப்பர் உற்பத்தியளர் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி எஸ். ஸ்ரீஜா நன்றி கூறினார்.

கல்லூரி மாணவி மரணம்:  பளுகல் காவல்துறை விசாரணை 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பளுகல் வன்னியூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகள் பென்சிலிண்டா (25). இவர் களியக்காவிளை பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 23ஆம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கப்பட்டுள்ளது.  திடீரென வெள்ளிக்கிழமை காலையில் காய்ச்சல் அதிகமாக இருந்ததால்  மாணவியை குடும்பத்தினர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு பெற்றோர்அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்ததின் பேரில் பளுகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் தந்தை பாஸ்கரன் பளுகல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர்  குமாரதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை

புதுக்கோட்டை, ஏப்.26-  புதுக்கோட்டை அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. புதுக்கோட்டை அருகே, வடவாளம் கீழக்காயாம் பட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து(35). மனைவி ராஜேஸ்வரி(28). இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். அவர்கள், அருகே வசித்து வரும் வீரமுத்துவின் தாயார் லட்சுமியின் வீட்டில் விட்டுவிட்டு கணவன், மனைவி இருவரும் கல்லுப்பள்ளத்தில் உள்ள விநாயகர் கோவில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நாடகம் பார்க்கச் சென்றுவிட்டனர். பின்னர், மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீரமுத்துவின் வீட்டுக்கு லட்சுமி சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, வீட்டுக்குள் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட காயத்துடன் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார். வீரமுத்து சடலமாக தூக்கில் தொங்கினார்.  இதுகுறித்த தகவலின் பேரில் சம்பட்டிவிடுதி காவல்துறையினர், வீரமுத்து மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரின் சடங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறினால் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு வீரமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர்.

தொழிலாளர் நலவாரிய திட்டப்  பயன்கள் இரு மடங்கு அதிகரிப்பு

தஞ்சாவூர், ஏப்.26-  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், தொழிலாளர் நல வாரிய திட்டங்களின் பயன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார் தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை தெரிவித்ததாவது: தமிழக நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவர்கள் மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ அட்டை வழங்கும்  திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலும் இல்லாதது. சொந்தமாக கான்கிரீட் வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு அவர்களே  வீடு கட்டி கொள்வதற்கு ரூ.4 லட்சம், புற்று நோய், சர்க்கரை அளவு உச்சத்தில் இருத்தல் உள்ளிட்ட குணப்படுத்த முடியாத  நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு மாதம் ரூ.1,000 மருத்துவ உதவி, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் தொழி லாளர்களின் குழந்தைகளுக்குக் கல்லூரி  கட்டணம், விடுதி கட்டணம் முழுவதையும் வாரியமே ஏற்பது, உயிரிழக்கும் தொழிலா ளர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முழு செலவையும் வாரியம்  ஏற்று கொள்வது போன்ற திட்டங்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டவை. அதிமுக தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது ஒரு புதிய திட்டம்கூட கொண்டு வரப்படவில்லை. இப்போது மு.க. ஸ்டாலின் முதல்வராக  பொறுப்பேற்ற பிறகு அனைத்து திட்டங்க ளின் பயன்களும் இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது” என்றார் பொன்.குமார்.