tamilnadu

கொலை மிரட்டல் விடுத்த டிரம்ப்புக்கு கோமேனி எச்சரிக்கை

கொலை மிரட்டல் விடுத்த டிரம்ப்புக்கு கோமேனி எச்சரிக்கை

டெஹ்ரான்,ஜூன் 18- ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கோமேனிக்கு டிரம்ப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த மறுதினமே கோமேனி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான சண்டை ஆறு நாட்களுக்கு மேலாக தொடரும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கோமேனி எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் என்று அவர் தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  முன்னதாக டிரம்ப்  ஈரானின் வான்பரப்பு அமெரிக்கப் படிகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் உள்ளது. ஈரானிடம் நல்ல வான் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றும் இல்லை. உச்சபட்ச தலைவராக சொல்லிக்கொள்ளப்படும் கோமேனி எங்கே ஒளிந்துள்ளார் என எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு தான். ஆனால் இப்போதைக்கு அவரை கொல்லப்போவது இல்லை. ஈரான் முழுமையாக சரணடைய வேண்டும் என மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்தே இஸ்ரேலின் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கோமேனி எச்சரிக்கை செய்துள்ளார். ஆறாவது நாள் தாக்குதலிலும் ஈரானின் ஆயுத பலத்தை அழிக்கும் வகையிலான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. 50 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலமாக ஈரானின் யுரேனியம் செறிவூட்டலின் முக்கியப் பகுதியாகக் கருதப்படும் “சென்றிபியூஜ் உற்பத்தி தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி பல ஆயுத உற்பத்தி தளங்களையும் குறிவைத்து தாக்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை  ஈரான் முழுவதும் 585 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 1,326 பேர் படுகாய மடைந்ததாகவும் மனித உரிமைகள் குழு  ஒன்று அறிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும் 126 பேர்  பாதுகாப்புப் பணியாளர்கள் என்றும் அடை யாளம் கண்டுள்ளதாகவும் அக்குழு தெரி வித்துள்ளது. ஆனால் ஈரான் அரசு பலி எண்ணி க்கையை உறுதிப்படுத்தவில்லை. இறுதியாக  வெளியிட்ட எண்ணிக்கையில் 224 பேர் கொல்ல ப்பட்டதாகவும், 1,277 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.