நோக்கில் பட்ஜெட் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. நீதிமன்றக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டு ரூ.150 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. நில வரி சீரமைப்புகள் மூலம் ரூ.100 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிவார ணம் அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி நிலுவை களுக்கான மன்னிப்புத் திட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு :
கேரளாவின் எதிர்காலத்திற்கான அடித்தளம் சாலை மற்றும் பாலப் பணிகளுக்காக மொத்தம் ரூ.3,061 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு மெட்ரோ திட்டங்கள் மற்றும் விழிஞ்ஞம் துறைமுக மேம்பாடு ஆகியவை மாநிலத்தின் உள்கட்டமைப்பை மறுவடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டங்க ளுக்காக ரூ.1,986 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி நிலையான நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டம் நகரங்களை நிலையான, சுற்றுச்சூழல் நட்பு இடங்களாக மாற்றும் என உறுதியளிக்கி றது. டிஜிட்டல் உள்கட்டமைப்பில், கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் (கேபோன்) மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டங்க ளுக்காக ரூ.1,986 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி நிலையான நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டம் நகரங்களை நிலையான, சுற்றுச்சூழல் நட்பு இடங்களாக மாற்றும் என உறுதியளிக்கி றது. டிஜிட்டல் உள்கட்டமைப்பில், கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் (கேபோன்) மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
மக்கள் மைய அணுகுமுறை:
சமூக நலனின் மையம் கேரள பட்ஜெட்டில் வீட்டுவசதி முன்னுரிமை பெறுகிறது. லைப் மிஷன் திட்டம் குறிப்பி டத்தக்க வெற்றி பெற்றுள்ளது. 4.27 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 1.11 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.1,160 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு ரூ.10,431 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது, அதில் காருண்யா ஆரோக்ய சுரக்ஷா பத்ததி (KASP) திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டு களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்க ளுக்கு ரூ.6,788 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும்
தொழில்துறை புத்தாக்கம் தொழில்நுட்பத் துறையில், கண்ணூர் மற்றும் கொல்லத்தில் புதிய ஐடி பார்க்குகள் மற்றும் வழித்தடங்களை உருவாக்க ரூ.517 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ஜிபியு கிளஸ்டருக்கு ரூ.10 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில்துறை மேம்பாட்டிற்காக ரூ.1,831 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. முதலமைச்சரின் தொழில்முனை வோர் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுதோறும் 500 சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க இலக்கு நிர்ண யித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை:
பசுமை எதிர்காலத்திற்கான பாதை கேரளாவின் வளங்களைப் பயன் படுத்தும் முன்னோடித் திட்டமான கிரீன் ஹைட்ர ஜன் வேலி திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. சூரிய மின் திட்டங்கள் மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) விரிவாக்கம் கேரளாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்கும் முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி
உயர்மதிப்பு தோட்டக்கலை மையமாக கேர ளாவை மாற்றுவதற்கு ரூ.30 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகங்களின் சீரமைப்பு மற்றும் கண்ணூரில் உலகளாவிய பால் கிராமம் அமைப்பதற்கு ரூ.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக சமூகங்களை மேம்படுத்தவும், பொருளாதார வாய்ப்புகள் மாநிலத்தின் அனைத்து மூலைக ளையும் சென்றடைவதை உறுதிசெய்யவும் இந்த முதலீடுகள் இலக்கு கொண்டுள்ளன. சமத்துவத்தை உறுதி செய்தல் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் நலனுக்கு முறையே ரூ.105 கோடி மற்றும் ரூ.706 கோடி அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்க ளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடிகள் மற்றும்
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பின்மை கேரள மாநிலத்தின் முற்போக்கான பட்ஜெட் பார்வை இருந்த போதிலும், ஒன்றிய அரசின் அணுகுமுறை கடும் சவால்களை ஏற்படுத்து கிறது. ஒன்றிய அரசு கேரளாவிற்கான நிதி ஒதுக்கீ டுகளை குறிப்பிடத்தக்க அளவு குறைத்துள்ளது. மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்புகளில் கடு மையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசின் திட்டங்க ளுக்கான நிதி வெளியீட்டில் தாமதம் ஏற்படுகி றது. வளர்ச்சித் திட்டங்களுக்கான கூடுதல் நிதி கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இந்த நிதி நெருக்கடிகளை சமாளிக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதி