ஜம்மு, மே 24- பாதுகாப்பான இடத்திற்கு மாற் றும் வரை பணியில் சேர மாட்டோம் என காஷ்மீரி பண்டிட்டுகள் அறிவித் துள்ளனர். காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் சமாளிப்பை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ஜம்மு காஷ்மீரின், புத்காம் மாவட்டம் சதுரா கிராமத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி யாற்றி வந்த ராகுல் பட் (35) என்ற காஷ்மீரி பண்டிட், கடந்த மே 12-ஆம் தேதி அவரது அலுவலகத்திலேயே பயங்கரவாதிகளால் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட ராகுல் பட் ஷேக்புராவில் உள்ள புலம்பெயர்ந் தோர் முகாமில் வசித்து வந்தவர் ஆவார். காஷ்மீரில் குடியேறியவர் களுக்கான பிரதமர் சிறப்பு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2010-ஆம் ஆண்டு அரசுப் பணியில் நியமிக்கப் பட்டிருந்தார். அவருக்கு மனைவி யும், 7 வயது மகளும் இருக்கும் நிலையிலேயே, பரிதாபகரமான முறையில் கொல்லப்பட்டார்.
எனவே, ராகுல் பட் படுகொலை யைக் கண்டித்து பண்டிட் சமூகத்தி னர் போராட்டங்களில் இறங்கினர். சாலை மறியலில் ஈடுபட்டும், மெழுகு வர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றும் எதிர்ப்பைத் தெரிவித்த அவர்கள், ராகுல் பட் இறுதி நிகழ்ச்சியின் போது, போலீசாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகளையும் எதிர்கொண்டனர். அதைத்தொடர்ந்து, “ஒன்றிய பாஜக அரசானது, புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்களுக்கு பாது காப்பு அளிப்பதாக கூறி, இளம் பண் டிட்டுகளைத் துப்பாக்கித் தோட் டாக்களுக்கு இரையாக்குகிறது; இதனால் காஷ்மீரில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற காஷ்மீரி பண்டிட்டுகளின் கனவு தவிடுபொடி யாகி விட்டது” என்று குற்றம் சாட்டிய அவர்கள், பிரதமர் மோடி, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா வுக்கு எதிராக கடந்த 2 வாரங்க ளுக்கும் மேலாக போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, செவ்வாயன்று ஷெய்க்பூ ரில் உள்ள புலம்பெயர் தொழிலா ளர்களான காஷ்மீரி பண்டிட்டுகளின் முகாமிற்கு நேரில் சென்றார். அங்கு தொழிலாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “காஷ்மீர் நிர்வாகம் தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது. உங்க ளது பிரச்சனைகள் நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்து சமாதானத்தில் ஈடுபட்டார். இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் ஜம்முவில் பாதுகாப்பான இடத் திற்கு தங்களை மாற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட் டோம்; பணிகளுக்கும் திரும்ப மாட் டோம் என்று உறுதியாக கூறிவிட்டனர்.