tamilnadu

img

விருதுநகரில் கரிசல் இலக்கிய திருவிழா

விருதுநகர், டிச.8- விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக கரிசல் இலக்கியத் திருவிழா நிகழ்ச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகை யில், ‘‘தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், இராம நாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு  வாழும் மனிதர்களைக் கதாமாந்தர் களாகவும் கொண்டு, வெந்து தணியும் அந்த கந்தக பூமியில் அவர்களின் பாடுகளை, வாழ்வியலை, வலிகளை, சந்தோஷத்தை அந்த மண்ணிற்கே உரிய வட்டார மொழிநடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சொல்லி வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம். இதை நாமும் நமது சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் நோக்கமாகக் கொண்டு, இந்த கரிசல் இலக்கியத் திருவிழா  நடத்தப்படுகிறது. இந்த மண்ணில்  பல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.  எழுத்தாளர்களுடைய சமகால படைப்புகளை தொகுத்து ஒரு நூலாக வும், கால வரிசைப்படி, இந்த மண்ணை  புரிந்து கொள்வதற்கு சிறுகதைகளின் வழியாக எளிதாக வாசித்து புரிந்து  கொள்வதற்கு அடுத்த தலைமுறை யினர்;

இந்த மண்ணில் பிறக்கும் மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகள் தொகுப்பையும் இந்த இலக்கிய திருவிழா வாயிலாக கொண்டு வந்திருக்கின்றோம்’’ என தெரிவித்தார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகன்  சிறப்புரையாற்றினார். எழுத்தா ளர் எஸ்.ராமகிருஷ்ணன்  காணொலி காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கி னார். பின்னர் எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், எழுத்தாளர் மாதவராஜ் ‘கரிசல் வட்டார சிறு கதைகள்’ என்ற தலைப்பிலும், முனை வர் நா.சுலோசனா ‘கரிசல் படைப்பு களும் சமுதாயத் தாக்கமும்’ என்ற  தலைப்பிலும், கவிஞர் இலட்சுமி காந்தன் ‘கரிசல் நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சு.காமராஜ் ‘கரிசல் வட்டார நாவல்கள்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மணிமாதவி ‘கரிசல் மண்ணின் பெண்கள்’ என்ற தலைப்பி லும் கருத்துரைகளை வழங்கினர். தொடர்ந்து, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ‘கரிசல்: நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேராசிரியர் மு.ராமச்சந்திரனின் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர் தண்டபாணி, அரசு அலுவலர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.