தூத்துக்குடி, ஏப்.19- தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி (வயது 22). இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி அன்று காலை காமராஜ் கல்லூ ரியில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு எழுதும் அறையில் ஏற்கனவே பாடம் நடத்திய போது எழுதப்பட்ட விடைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை மாணவர்கள் சிலர் தேர்வின் போது பார்த்து எழுதியதாகக் கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விஸ்காம் துறை பேராசிரியர்கள் சுரேஷ், சீனிவாச மணி கண்டன் ஆகியோர் மேற்படி மாணவர்களை இடைநீக்கம் செய்வதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க நிர்வாகி நேச மணி பேச முயன்றுள்ளார். அப்போதுபேராசிரியர்கள் இருவரும் சேர்ந்து இந்திய மாணவர் சங்கத்துக் காரன் தானே நீ. நீ என்ன பெரிய ஆளா எனக் கூறி தகாத வார்த்தை களால் திட்டி அங்குள்ள அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மாணவர்கள் இணைந்து கதவுகளை திறந்து நேசமணியை காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்துள்ளனர். நேசமணி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்திலும் நிர்வாகியாக உள்ளார். தற்போது நேசமணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், சக மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த இந்திய மாணவர் சங்க, வாலிபர் சங்க நிர்வாகி நேசமணி மீது தாக்குதல் நடத்திய கல்லூரி பேராசிரி யர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், மேலும் இது போல் அசம்பாவிதங்கள் ஏற்படாத வாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவாதம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.