கோவை, மார்ச் 4- கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா வெள்ளியன்று தேர்வு செய்யப் பட்டு, பொறுப்பேற்று கொண் டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் உறுப் பினர்கள் வெற்றி பெற்றனர். 3 வார்டுகளில் அதிமுக வேட்பாளர் களும், ஒரு வார்டில் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரும் வெற்றி பெற்றார். இவர்களது பதவி ஏற்பு விழா கடந்த 2 ஆம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வெள்ளியன்று காலை 9.30 மணிக்கு கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில், கோவை மாநக ராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற் றது. இதில் 19 ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கல்பனா மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேய ராகவும், முதல் பெண் மேயராக பொறுப்பேற்றார். இதனை யடுத்து காலை 10 மணிக்கு மேயர் அங்கி அணிந்து மேயர் இருக்கை யில் கல்பனா அமர்ந்தார். அவ ருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி செங்கோல் மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட பொறுப்பாளர் கள் கார்த்திக், மருதமலை சேனாதி பதி, பையா ஆர்.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் மேயர் கள், ராஜ்குமார், காலனி வெங்கடா சலம் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த னர். இந்த மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வில்லை. இதர 97 மாமன்ற உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.
கோவை துணை மேயராக இரா.வெற்றிச்செல்வன் தேர்வு
கோவை மாநகராட்சி தேர்த லில் 92 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.வெற்றி செல்வன் வெற்றி பெற்றார். இந் நிலையில் கோவை மாநகராட்சி யின் துணை மேயர் பொறுப்புக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட் டது. இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற்ற துணை மேயர் தேர்தலுக்கு இரா.வெற்றி செல்வன் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டி யிடாததால் அவர் வெற்றி பெற்ற தாக தேர்தல் நடத்தும் அலுவல ரான கோவை மாநகராட்சி ஆணை யாளர் ராஜகோபால் சுன்கரா அறி வித்ததோடு, அவருக்கு வெற்றி சான்றிதழும் வழங்கினார். இதை யடுத்து மேயர் கல்பனா, திமுக நிர்வாகிகள் மற்றும் சக கவுன்சிலர் கள் அவருக்கு வாழ்த்து தெரிவித் தனர்.
மாநகராட்சி பள்ளிக்கு கழிப்பிடம்
கல்பனா பதவியேற்ற பின் முதல் கையெழுத்தாக, 26 ஆவது வார்டு பீளமேடு பயணியர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரூ.16 லட்சம் மதிப் பீட்டில் கழிப்பிடம் கட்டுவதற்காக கோப்பில் கைழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் குப்பைகளை அகற்ற, மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும். எனக்கு இந்த உயரிய பதவியை வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாமன்ற உறுப்பினர் கள் கட்சி முன்னோடிகள் தோழமை கட்சிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நானே நேரில் சந்தித்து குறைகளை கேட் டறிந்து அதை நிறைவேற்றுவேன். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் என்னை எப்போது வேண்டு மானாலும் பொதுமக்கள் சந்திக்கலாம். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். அடிப்படை உறுப்பினராக இருந்த என்னை உயரிய பதவியில் அமர வைத்து தமிழக முதல்வர் அழகு பார்த்து உள்ளார். அவரின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகை யில் நான் பணியாற்றுவேன். மின்சாரத்துறை அமைச்சர் மாநக ராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கோவை மாநகராட்சி மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப் படும். கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் தடையின்றி குடி நீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, தெரு விளக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகளை அகற்ற செய்தல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தல் போன்ற கோவை மாந கரத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.