வக்பு சட்டத்திற்கு எதிராக ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தீர்மானம் ஜேஎம்எம் அறிவிப்பு ராஞ்சி, ஏப்.13- மோடி அரசின் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜார்க் கண்ட் சட்டமன்றத்தில் தீர்மா னம் கொண்டுவரப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி அறிவித்துள் ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜேஎம்எம் கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். இந்நிலையில், 2 வாரத்திற்கு முன்பு முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நோக்கத்தில் வக்பு திருத்த சட்டத்தை நாடாளு மன்ற இரு அவைகளிலும் மோடி அரசு நிறைவேற்றியது. இந்த வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வக்பு சட்டத்திற்கு எதிராக ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என ஆளும் ஜேஎம்எம் கட்சியின் தேசிய செயலா ளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”வக்பு திருத்த சட்டத்தை ஜேஎம்எம் கடுமையாக எதிர்க்கிறது. வக்பு திருத்தச் சட்டம் மத சம்பந்தமான நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு விதி களுக்கு முரணானது. வக்பு நிலங்கள் மாநிலத்தின் பொறுப்பு. ஒவ்வொரு மாநில அரசும் இதில் பங்கு வகிக்கிறது. மாநிலங்க ளோடு பேசாமல் ஒன்றிய அரசு திருத்தங்களை கொண்டு வந்தால், மாநிலங்கள் ஏன் அதை ஏற்க வேண்டும்? நில விவ காரங்களால் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டால், அதை தீர்ப்பதும் மாநிலத்தின் கடமை. ஆனால் ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்கு வைத்தே வக்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. வக்பு சட்ட விவ காரத்தில் ஜார்க்கண்டில் மாநிலத்தின் சொந்த விதிகளை பின்பற்றுவோம். ஒன்றிய அரசின் திருத்தங்களை ஜார்க்கண்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக மாநில சட்டமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மான முன்மொழிவை கொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.