tamilnadu

ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளி வைப்பு

சென்னை,பிப்.24- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் எழுந்த பிரச்ச னையின் போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலான அதிமு கவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் நரேஷை தாக்கி, அவரது சட்டையை கழற்றி னார். இந்த சம்பவத்தை தனதுமுகநூல்   பக்கத்தில்   ெஜயக்குமார் வெளியிட்டி ருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுபின்னர் நரேஷ் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டை யார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில்  ெஜயக்குமார் ்கைதுசெய்யப்பட்டு       சிறையில்    அடைக்கப்ட்டார்.  இவர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவைஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன் த்தில் ெஜயக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு பிப்.24 அன்று காலை   விசாரனைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனு நகல் காவல்து றைக்கு இதுவரை வழங்கப் படவில்லை என்று கூறினார். புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான வ, ெஜயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய உள்ள தாக கூறினார். இதை யடுத்து ஜாமீன் மனுவின் நகலை போலீஸ் தரப்புக்கு வழங்க ஜெயக்குமார் தரப்புக்கு நீதிபதி உத்தர விட்டார். மேலும் நரேஷ் தரப்பில் ஆட்சே பனை மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு பிப்.25  தள்ளி வைத்தார்.