tamilnadu

img

தாயும் நதியும்!

‘‘பெற்ற தாயின் காலைத் தொட்டு வணங்குவதற்கு ஒரு காரணமல்ல; ஆயிரம் காரணங்களைக் கூற முடியும். அது போலத் தான் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்போடு நாங்கள் வைகை நதியைத் தொட்டு வணங்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம்.  வைகை நதி ஓடியதை ஒட்டி கரையில் ஒரு நகரம் உருவானது. நகரத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர். மக்களிடமிருந்து நாகரீகம் பிறந்துள்ளது. அது மட்டுமல்ல, மதுரை நகரம் சமயச் சார்பற்ற நகரம். அரசியல் தலைநகரம், அன்பான நகரம், அழகான நகரம். இந்த மதுரை நகரில் கொளுத்தும் வெயிலிலும் தோழமைக்கட்சியினர் திரண்டு வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வீடுகள் தோறும் சென்று பெண்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனர். மதுரை மட்டுமல்ல, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றி பெறும். நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக மதுரை தொகுதியின் வெற்றி அமையும். பிரச்சாரத்தில் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன்