tamilnadu

img

தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணை வழங்கல்

தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான  ஆணை வழங்கல்

அரியலூர், ஜுன் 24-  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், நிதி உதவித் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி திங்களன்று வழங்கினார். அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு, அவர்களின் திட்ட காலத்திற்கு ஏற்றவாறு படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.4000 வீதம், (அக்டோபர்-2024 முதல், மார்ச்-2025 வரை) மொத்த கூடுதல் தொகை ரூ.1 கோடியே 7 லட்சத்து 4 ஆயிரத்துக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 3 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் (ரூ.4ஆயிரம் வீதம் அக்டோபர் - 2024 முதல் மார்ச் - 2025 வரை) 6 மாதங்களுக்கு மொத்த கூடுதல் தொகை ரூ.72 ஆயிரத்திற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், இதர அரசு அலுவலர்கள் மற்றும் மாணாக்கர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.