tamilnadu

பணியாளர் விதிகளுக்கு முரணான கலந்தாய்வை மறு பரிசீலனை செய்க!

சென்னை,ஜன.3- சமீபத்தில் பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்ட  கலந்தாய்வு அட்டவணை யில் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வுக் கான தேதி குறிப்பிடாமல் இருப்பது  மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றும் இச்செயல் அரசு பணியாளர் விதிகளுக்கு முரணானது என்பதால்  பள்ளிக் கல்வித்துறை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு  இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலா ளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. மாநில தலை வர் மு.தியாகராஜன் தலைமை வகித்தார்.  

மாநில அமைப்புச் செயலாளர் க.வெங்கட்ரா மன், பொதுச் செயலாளர் அ.சங்கர்,  மாநில துணை பொதுச் செயலாளர் எட்வின்  பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அரசு-அரசு உதவி பெறும்,  உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் உள்ள இடை நிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி அதில் பணியாற்றக் கூடிய அனைத்து இடை நிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரி யராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கவும், ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஆணை பிறபித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், முந்தைய அதிமுக, அரசால் கொரோனா பெயரால் பறிக்கப்பட்ட உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு போன்ற வற்றை தமிழக அரசு பரிசீலனை செய்து விரைவில் அறிவிக்க வேண்டும். சமீபத்தில் பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்ட கலந்தாய்வு அட்டவணை யில் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்ளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வுக் கான தேதி குறிப்பிடப்படவில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக பதவி உயர்வு வழங்காத நிலையில்  இந்த ஆண்டும் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பது அரசு பணியாளர் உரிமை சட்டத்திற்கு எதிரானது. இச்செயல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி யில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும்  பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணி யாளர் தொகுதி) ஆகியோர் கலந்தாய்வு அட்ட வணையை மறு பரிசீலனை  செய்ய வேண்டும். இவ்வாறு சங்கர் தெரிவித்திருக்கிறார்.