புதுதில்லி,டிச.22- சுங்க கட்டண வருவாய் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் நாட்டில் போக்குவரத்து அடர்த்தி ஆண்டுதோறும் அதி கரித்து வருகிறது என்றும் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில் , இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தற் போது சுங்க கட்டணம் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வரு கிறது. நாட்டில் போக்குவரத்து அடர்த்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீட்டா ளர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் சுங்க கட்டண வருவாய் ஆண்டிற்கு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உயரும். சாலை கட்டுமான திட்டங்களில் குழுக்கள் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், செலவு அதிகரித்து விடும் என்று தெரிவித்தார். இதனிடையே 5 ஆண்டுகளில் ஃபாஸ்டேக் வசூல் ரூ.1,18,881 கோடியாக உள்ளது. ஃபாஸ்டேக் திட்டம் தொடங்கப்பட்ட 2016 - 17 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த சுங்க வசூல் 17,942 கோடியாக இருந்தது. 2017 - 18ஆம் நிதியாண்டில் 21,948 கோடி ரூபாயாகவும், 2018 - 19 ஆம் நிதியாண்டில் 24,396 கோடியாக ஃபாஸ்டேக் வசூல் இரு ந்துள்ளது. இதேபோல், 2019 - 20 ஆம் நிதியா ண்டில் 26,850 கோடி ரூபாயாகவும், நடப்பு நிதியாண்டில் 27,744 கோடி ரூபாயாக வும் ஃபாஸ்டேக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.