tamilnadu

img

கட்டப்பட்ட கைகளும், குற்றவாளிகளாக்கப்பட்ட இந்தியர்களும் அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நாடுகடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோத குடி யேற்றத்திற்காக நாடுகடத்தப்பட்ட 117  இந்தியர்கள், குற்றவாளிகளைப் போல  கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியுமாக சி-17 ராணுவ விமா னத்தில் அமிர்தசரஸ் விமான நிலை யத்தில் பிப்ரவரி சனிக்கிழமை நள்ளி ரவு வந்திறங்கினர். இது கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி 104 இந்தியர்கள் இதே போல நாடுகடத்தப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18-30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள். பஞ்சாபில் இருந்து 67 பேரும், ஹரியானாவில் இருந்து 33 பேரும், மற்ற மாநிலங் களில் இருந்து 17 பேரும் அடங்குவர்.  “கழுதை பாதை” எனப்படும் சட்ட விரோத வழியில் அமெரிக்கா சென்ற தாக நாடுகடத்தப்பட்ட தல்ஜீத் சிங் தெரிவித்தார். ஏமாற்றப்பட்டு சட்ட விரோத வழியில் அனுப்பப்பட்டதாக தல்ஜீத் சிங்கின் மனைவி கமல்ப்ரீத் கவுர் கண்ணீருடன் தெரிவித்தார். பயணத்தின் போது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக 20 வயது இளைஞர் சவுரவ் குறிப்பிட்டார். ஒன்றிய அரசின் மெளனத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோதும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்ற மும் ஏற்படவில்லை.

ஹரியானா அரசின் அராஜகம்

இதற்கிடையில், ஹரியானா மாநில அரசு, நாடுகடத்தப்பட்ட தங்கள் மாநில இளைஞர்களை வலைகள் பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்களில் ஊர்களுக்கு அனுப்பி யது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதனை பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த சம்பவங்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளின் பெயரில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், இந்திய அரசின் மெளனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.