tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

இந்தியா டிராவல் மார்க்கெட்   பயணம், சுற்றுலா கண்காட்சி

திருச்சிராப்பள்ளி, அக்.24 - இந்தியா டிராவல் மார்க்கெட் எக்சிபிஷன்ஸ் (ஐ.டி.எம்.இ) ப யண ஆலோசகர்கள், தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் வணிக ஆர்வலர்கள் பங்கேற்ற, பயண மற்றும் சுற்றுலா கண்காட்சி திருச்சியில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்தக் கண்காட்சி, பயண முகவர்களை தமிழகத்தி லிருந்து, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகை தரும் புகழ்பெற்ற கண்காட்சியாளர்களுடன் இணைக்கும் முக்கிய மையமா கும். இத்துடன், பூட்டான், துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற இடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் டெஸ்டினேஷன் மேனேஜ்மெண்ட் கம்பெனிகள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்டவர்கள் நெட்வொர்க்கிங் செய்ய, புதிய வணிக வாய்ப்புகளை ஆராய,  பயண மற்றும் சுற்றுலா  துறையில் வெளிப்படும் புதிய போக்குகளைப் பற்றிய அறிவு பெறும் வாய்ப்புகளை பெற்றனர். “பயணத் துறையின் முக்கிய வர்த்தகர்களை ஒரே  இடத்தில் ஒன்றிணைத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது முகவர்கள் மற்றும் கண்காட்சியாளர்களுக்கு வலு வான வணிக உறவுகளை அமைக்கும் அரிய வாய்ப்பு” என்று  (ஐ.டி.எம்.இ) ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தொடக்க விழாவில், சுற்றுலாத் துறை மற்றும் தமிழக அரசின் சுற்றுலா அதிகாரி எஸ்.எம்.ஸ்ரீ பாலமுருகன் கலந்து  கொண்டார். தமிழ்நாடு அத்தியாயத்தின் தலைவர் பி.அசோக்  குமார், ஏ.டி.டி.ஓ, லயன் எஸ்.பி. ராஜேந்திரன், டி.ஏ.ஏ.ஓ.ஐ தெற்கு தமிழ்நாடு அத்தியாயத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

ரயில் விபத்தில் சிக்கியவர்களை  மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி

 திருச்சிராப்பள்ளி, அக்.24 - ரயில் விபத்துகளின் போது, மீட்புக் குழுவினர் எவ்வாறு  துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய  பேரிடர் மீட்புப் படையினரின் செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் வெள்ளி யன்று நடந்தது. இதற்காக ஒரு ஏசி மற்றும் 2 பொதுப் பெட்டிகள் என 3 ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டன. இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு பொருட்கள், ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி, திருச்சி  கோட்ட பாதுகாப்பு பிரிவு முதுநிலை அலுவலர் ஸ்ரீதர் தலை மையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர்  விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்து, உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்த  துரித செயல்பாடுகளின் ஒத்திகை நடத்திக் காட்டப்பட்டது.