tamilnadu

இந்தியாவின் முதல் மூளை அருங்காட்சியகம்

நூற்றுக்கணக்கான மனித மண்டையோடுகள் தைரியசாலிகள் மட்டும் சென்று பார்த்துவர என்று சொல்லப்படும் ஒரு அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ளது. அருங்காட்சியகங்கள் உலகை அறிய ஆர்வமுடைய அனைவருக்கும் அறிவூட்டும் இடம். பல அம்சங்களை மையமாகக் கொண்டு லட்சக்கணக்கான அருங்காட்சியகங்கள் உலகில்  செயல்படுகின்றன. இவற்றில் கேட்டால் விசித்தி ரமாகத் தோன்றும் அருங்காட்சியகங்களும் உள்ளன. பார்வையாளர்களுக்கு புதிய அறிவை  வழங்குவதே இவற்றின் இலட்சியம். பந்நாட்டு அருங்காட்சியகங்களுக்கான கவுன்சில் (ICM) அமைப்பின் தலைமையில் ஆண்டுதோறும் மே 18  உலக அருங்காட்சியக தினம் கொண்டாடப்படு கிறது. உண்மையான மனித மூளையைக் காட்சிப் படுத்தும் ஒரு அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ளது. கர்நாடகா பெங்களூரு நிம்ஹான்ஸ் எனப்படும் தேசிய நரம்பியல் நலம் மற்றும் மன நல அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (The National  Institute of Mental Health&Neuro Science NIMHANS) நரம்பியல் பிரிவின் அங்கமாக இந்த அரிய அருங்காட்சியகம் செயல்படுகிறது. மனித மூளை குறித்து கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரு கிறது. நரம்பியல் ஆய்வாளர்கள், மாணவர்கள், இத்துறையில் ஆர்வமுள்ளவர்களே இங்கு அதி கம் வருகை தருகின்றனர். மூளைகளுக்காக இந்தி யாவில் இருக்கும் ஒரே ஒரு அருங்காட்சியகம் இது. இங்கு விலங்குகள் மற்றும் பல்வேறு நிலை களில் இருக்கும் மனித மூளைகளின் அமைப்பைக்  காட்டும் மண்டையோடுகள் உள்ளன. அறுநூற்றிற்கும் அதிகமான மண்டையோடு கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இதில் நானூ றிற்கும் மேற்பட்டவை மனித மண்டையோடுகள். இதை அமைக்க நாற்பதாண்டுகள் ஆனது.  மூளைக்கட்டிகள், பார்க்கின்சன், பக்கவாதம்,  அல்சைமர்ஸ் போன்ற பல நோய்வாய்ப்பட்ட வர்களின் மூளைகள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ஹெச் ஐ வி, ஸ்கீசோப்ரினியா, பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளைகள் இங்கு உள்ளன. புகை பிடிப்பவரின் நுரையீரல், மூளை பாதிப்படைந்தவர்களின் மூளையைக் காண இது ஒரு அரிய வாய்ப்பு. இங்கு விலங்குகளின் மூளைகள் முதலில் காட்சிக்கு உள்ளன. இதைத் தொடர்ந்து மனித மூளைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தாயின் கர்ப்பப்பையில் கரு உருவாவது முதல்  மனித மூளையின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை காணமுடியும்.  விபத்துகளில் உயிரி ழந்தவர்கள் மற்றும் நோய்த்தொற்றினால் மரண மடைந்தவர்களின் மூளைகளும் உள்ளன. மண்டையோட்டில் அமீபா தொற்று நிறைந்த மனித மூளைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொட்டுப் பார்த்து அறியும் அபூர்வ வாய்ப்பும் பார்வையாளர்களுக்கு வழங்கப்  படுகிறது. மனித உடலைப் பற்றி அருகில் இருந்து  தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடத்திற்கு வருகை தருவது மறக்கமுடி யாத ஒரு அனுபவம். மனித மூளையைப் பற்றி  பொதுமக்களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. அருங்காட்சியகத்தைப் பார்வையிட அனுமதி  இலவசம். பெங்களூரில் ஹோசூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள மருத்துவக் கழக  வளாகத்தில் செயல்படும் இந்த அருங்காட்சி யகத்திற்கு பொது விடுமுறை நாட்கள் மற்றும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை.