tamilnadu

img

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களுக்கான குடிநீர் திட்டம் துவக்க விழா:

இராமநாதபுரம்,மே 27-  இராமநாதபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மே 27 அன்று தமிழ்  நாடு குடிநீர் வடிகால் வாரி யம் துறையின் மூலம் ரூ. 2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான துவக்க விழா மற்றும் பேரூராட்சிகள் நிர்வாக துறையின் மூலம்  முடிக்கப்பட்ட திட்டப்பணி களுக்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  தமிழக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை - கதர்  கிராமத் தொழில்கள் வாரி யத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையேற்று துவக்கி வைத்தனர்.  இவ்விழாவில் அரசு கூடு தல் தலைமைச் செயலாளர், ஷிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் இராம நாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் செ.முரு கேசன் மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.