மதுரையில், லக்னோவில் இருந்து வந்த சுற்றுலா ரயிலில், ரயில் பெட்டியை பூட்டிவிட்டு சமைத்தபோது ஏற்பட்ட தீ விபத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னெளவில் இருந்து தென் மாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா வந்த ரயிலில் 180 பயணிகள் கடந்த 17-ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக நேற்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு இன்று அதிகாலை 5.15 மணி அளவில் வந்தடைந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை-போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயிலில், சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயில் பெட்டியை உள் பக்கமாக பூட்டிவிட்டு, ரயிலுக்குள் மண்ணெண்னை அடுப்பு வைத்து சமையல் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை அடுத்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வேவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.