பெங்களுரின் அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்ப, 5-ஆவது மாடியில் இருந்து குதித்த நபர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் 4-ஆவது மாடியில் பிரபலமான பாரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரியத் தொடங்கிய நிலையில் கட்டிடம் முழுவதுமாக தீ பரவியுள்ளது.
கீழ்த் தளத்திலிருந்து மூன்றாம் தளம் வரை தீ பரவிய நிலையில் நெக்ஸா கார் ஷோரூம் இருந்துள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டவுடன் மேலே இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.
சிலிண்டர் வெடித்த பிறகு கார் ஷோரூமில் இருந்த கார்களும் பற்றி எரியத் தொடங்கியது.
தீயை அணைப்பதற்காக சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக தீ விபத்து ஏற்பட்ட போது மேல் மாடியில் பலர் சிக்கிக் கொண்டனர். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு நபர் மேலே இருந்து கீழே குதித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.