இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பய ணத்தின் கன்னியாகுமரி-திருச்சிராப்பள்ளி பயணத்தில் செங்கோட்டையிலிருந்து ஆர்.பி,ஆதவன் (13) இணைந்துள் ளார். இந்தப் பயணக்குழுவில் இவர்தான் குறைந்த வயதுடை யவர். இவரது தந்தை பட்டாபிராமன். தாயார் ராஜேஸ்வரி, தந்தை கட்டுமானத்துறையில் உள்ளார். தாயார் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். ஏழாம் வகுப்பு படித்து வரும் ஆதவன், ஐபிஎஸ் அதி காரியாக வேண்டுமென்ற லட்சியத்துடன் உள்ளார். வேலை வாய்ப்பின்மை எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதை இந்த பயண அனுபவத்தில் உணர்ந்துள்ளதாகக் கூறிய ஆதவன், இந்தப் பயண அனுபவத்தை எனது சக மாண வர்களிடமும் எங்களது ஊரில் வசிக்கும் இளைஞர்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன் என்றார் உற்சாகமாக.