tamilnadu

img

மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை! - -சு.வெங்கடேசன் எம்.பி.-

முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன்!

மதுரை, ஜூலை 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி., தமிழக முதல்வருக்கு வேண்டு கோள் விடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: “ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்ச கம் சார்பில் இந்தியாவின் தூய்மை யான நகரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை  நகரங்கள் குறித்தான அறிக்கை யானது குப்பைகளை வீட்டுக்கு வீடு  சேகரித்தல், குப்பைகளை வகைப்  பிரித்தல், குப்பை மேடுகளை மறுசீர மைத்தல், நீர்நிலைகள், சந்தைகள், பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில்  மதுரை நகரம் கடைசி இடமான  40-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.  மதுரை நகரத்தைப் பொறுத்தவரை யில் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேக ரிக்கப்படுவது 37 சதவிகிதம், குப்பை வகைப்பிரித்தல் 26 சதவிகிதம், உருவாக்கப்படும் குப்பைகளை மறு சுழற்சி செய்து கையாளும் திறன் வெறும் 4 சதவிகிதம், குப்பை மேடு களை மறுசீரமைத்தல் 25 சதவிகிதம் என்கிற அடிப்படையில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

அதேநேரம் குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் தூய்மை எனும் பிரிவுகளில் 100 சதவிகிதம் பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையின்றி இருப்பதை 3 சதவிகிதம் மட்டுமே மதிப்பெண் பெற்றதை வைத்து அறிய முடிகிறது. மாநில அளவிலும் கணக்கெடுக் கப்பட்ட 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543-ஆவது இடத்தையே பெற்றுள்ளது.  இக்கணக்கெடுப்பின் நெறிமுறை யில் சில குறைபாடுகள் இருந்தாலும் மதுரை நகரத்தின் தூய்மை மிக மோச மாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. மதுரை மாநகராட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆணையர்கள் மாற்றப்  பட்டுள்ளனர். சிலரின் குறுகிய அர சியல் லாப நோக்கத்திற்காக மக்கள்  நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்பட்டு  வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த  திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்தபோது நாட்டிலேயே சிறந்த  முறையில் தூய்மையாக பராமரிக்கப் பட்டு வரும் கோவிலாக அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அதிக திருவிழா நடக்கிற கோவிலை நாட்டிலேயே தூய்மையாக நிர்வகிக்  கப்படும் கோவிலாக திரு. கருமுத்து  கண்ணன் அவர்களின் தலைமையி லான குழு செய்து காட்டியது.

பல லட்சம் பேர் வந்து செல்கிற கோவிலை அவ்வளவு தூய்மையாக நிர்வகிக்க முடிந்த போது, மதுரை  நகரைத் தூய்மையாக நிர்வகிப்பது கடினமல்ல. அதற்கான நிர்வாகத்  திறனும், நோக்கத்தின் நேர்மையும்  மிக முக்கியமானது. இந்த வர லாற்றுச் சிறப்பு மிக்க நகரத்தை உளப்பூர்வமாக நேசித்து பணி யாற்றும் உள்ளமும், திறனும் முக்கிய மானது. இந்த புள்ளிவிபரம் வெளிவந்த பின்னணியிலாவது மதுரை மாநகராட்சி  விழிப்புற்று செயல்பட வேண்டும். தங்க ளின் நடைமுறைகளை சுயபரி சோதனை செய்து கொண்டு உரிய நட வடிக்கைக்குத் தயாராக வேண்டும். மாநில நகராட்சித்துறை அமைச்சர் முன்னிலையில் மதுரை சார் அமைச் சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். இப்பிரச்சனையை விவாதிக்க மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். தூய்மையான நகரமே மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உத வும் என்ற புரிதலோடு மதுரைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி குப்பை மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றின் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட வேண்டும். 

மதுரையின் தூய்மை பணி பராமரிப்பு தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது குறித்தும், அதன் செயல்திறன் மற்றும் தூய்மைப் பணி யாளர் நிலை உள்ளிட்ட அனைத்தும்  விவாதிக்கப்பட்டு உரிய முடிவெடுக்கப்  பட வேண்டும். மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் தொண்டு நிறு வனங்கள், பல்வேறு அமைப்புகள் என  அனைவரும் பங்கேற்கும் சிறப்புத்  திட்டத்தை உருவாக்க வேண்டிய  கடமை பொறுப்பில் இருப்பவர் களுக்கே உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை  நகரத்தின் தூய்மையைப் பேணிக் காக்க மாண்புமிகு தமிழ்நாட்டு முத லமைச்சர் தலையீட்டைக் கோரு கிறேன்.”  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.