கோடை மழையால் கன்னியாகுமரியில் தேன் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
நாகர்கோவில், மே 6 - தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் தேன் உற்பத்தியில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆயி ரக்கணக்கான விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மார்த்தாண்டம் தேன் புவிசார் குறியீடு (GI) பெற்றுள்ளது. காரணம் அங்கு உற்பத்தி ஆகும் தேன் அதன் தரத்தையும், தனித்துவத்தையும் அங்கீகரிக்கிறது. மார்த்தாண்டம் மட்டுமின்றி காப்புகாடு, குழித்துறை, மஞ்சாலுமூடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிப் பகுதிகளிலும் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் கோடை மழை காரணமாக இந்த ஆண்டு தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் தேனீ வளர்ப்ப வர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர் என செய்திகள் வெளி யாகியுள்ளன.
தேனீக்களுக்கு உணவில்லை
கன்னியாகுமரியில் தேன் உற்பத்தி பொதுவாக பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும். தேனீ வளர்ப்பின் பெரும்பகுதி விளவங் கோடு, திருவட்டார், கல்குளம் மற்றும் கிள்ளியூர் தாலுகாக்களில் உள்ள ரப்பர் தோட்டங்களைச் சார்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் புதிய சிற்றிலைகள் வளரத் தொடங்கும். சிற்றிலைகளின் முனைகளில் தேன் உற்பத்தியாகும். இந்த தேன் தான் தேனீக்கு இரையாகும். ஆனால் தற்போது பெய்து வரும் கோடை மழை யால் ரப்பர் மரங்களின் மொட்டு களில் இருந்த தேனை மழைநீர் அடித்து சென்றுள்ளது. இதனால் தேனீக் களுக்கு உணவு கிடைக்கவில்லை. குலசேகரத்தைச் சேர்ந்த தேனீ வளர்ப்பாளர் எம். தாமஸ் கூறுகையில், “குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப் பாறை, பொன்மனை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ள பிற இடங்களில் உள்ள ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் 1,750 கிலோ தேனை உற்பத்தி செய்தேன். ஆனால் நடப்பாண்டு பருவத்தில் 500 கிலோ மட்டுமே தேன் உற்பத்தி செய்ய முடிந்தது” என வேதனையுடன் கூறினார். ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த வணிக நிர்வாகியாக இருந்து தேனீ வளர்ப்பவராக மாறிய ஜி.டேனியல் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் உள்ள வெள்ளிமலை உள்ளிட்ட பிற பகுதிகளில் தேனீ வளர்ப்பை மேற் கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருந்து நல்ல லாபம் ஈட்டிய போதி லும், இந்த ஆண்டு நல்ல மகசூலைப் பெற முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஒவ்வொரு பெட்டியிலும் 8 முதல் 20 கிலோ தேன் உற்பத்தி செய்வோம். ஆனால் இந்த பருவத்தில் மழை காரணமாக ஒவ்வொரு பெட்டியிலும் 2 கிலோ தேனை உற்பத்தி செய்ய என்னால் முடியவில்லை” என அவர் கூறினார். தேன் உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு காரணமாக, இந்த பருவத்தில் தேன் கொள்முதல் இலக்கைக் குறைத்துள்ள தாக மார்த்தாண்டம் தேனீ வளர்ப் போர் கூட்டுறவு சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அரசுத் திட்டங்களுடன் தேனீ வளர்ப்பவர்களுக்கு ஆதர வளிக்கும் தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்,”கோடை மழையால் ரப்பர் மரங்களில் தேன் அடித்துச் செல்லப்பட்டது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும் உள்ள ரப்பர் மரங்களில் தேன் உற்பத்தி குறைந்தது. இந்த நிலைமை தற்போது மட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது” என அவர் கூறினார்.