tamilnadu

இந்து தமிழ் திசை செய்தி தலைப்புக்கு கண்டனம்

இந்து தமிழ் திசை செய்தி தலைப்புக்கு கண்டனம்

மதுரை, ஜூன் 6 - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன், இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தியின் தலைப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் கைது  செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மதுரை எம்.பி.யின் பாதுகாப்பு பணியில்  இருந்தவர் எனக் குறிப்பிட்டு, “எம்.பி.யின் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மோச டியில் சிக்கினார்” என்று தலைப்பிட்டது ஊடக அறத்திற்கு எதிரானது என சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியின் படி, செந்தில்குமார் என்ற காவலர், சுழற்சி முறையில் பணியமர்த்தப் பட்டு, சு.வெங்கடேசனின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனால், இதே காவலர் மதுரைக்கு ஆளுநர் வருகை தந்தபோதும், பிரதமர் மோடி வருகை தந்தபோதும் பாதுகாப்பு பணியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு போலீஸ்காரர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் செய்தி. ஆனால், அவரை எனது பாதுகாப்பு பணியுடன் தொடர்புபடுத்தி தலைப்பிடுவது ஊடக அறமா?” என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இதே காவலர் ஆளுநர் அல்லது பிரதமரின் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த மோசடி வெளிவந்திருந்தால், அவர்களது பெயரையும் இதேபோல் தலைப்பில் இணைத்து, ‘ஆளுநரின் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மோசடியில் சிக்கி னார்’ அல்லது ‘பிரதமரின் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மோசடியில் சிக்கினார்’ என்று தலைப்பிடுவதாக உத்தேசமா?” என்று அவர் காட்ட மாக வினவியுள்ளார். இந்து தமிழ் திசை நாளிதழை கடுமையாக விமர்சித்த சு.வெங்கடேசன், இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வெளியீடுகள் பொது மக்களிடையே தவறான புரிதலை  உருவாக்கும் என தெரிவித்தார். #இந்து தமிழ்திசை, #MediaEthics, மற்றும் #ஊடகஅறம் ஆகிய ஹேஷ்டேக்கு களைப் பயன்படுத்தி, ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.