tamilnadu

img

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல்

“தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மதுரைத் தியாகிகள் நினைவுச் சுடர் துவக்க நிகழ்ச்சியில் செவ்வாயன்று பெ.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதை ஒன்றிய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.  சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் லாரி வாடகைகள் உயரும், லாரி வாடகை உயரும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயரும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை - எளிய மக்கள் தான்.

கார்ப்பரேட்டுகள் கொழிப்பதற்காகவே சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே, இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார். சட்டவிரோத வசூல் “நீண்ட காலமாகச் செயல்படும், காலாவதி யான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு உடனடியாக மூட வேண்டும்” என்று கூறிய பெ. சண்முகம், “தேசிய நெடுஞ்சாலைகள் பல பகுதிகளில் பயன்படுத்து வதற்கு லாயக்கற்றதாக மாறி விட்டன; மோசமான சாலைகளை சீரமைப்பதற்கு பதில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதிலேயே ஒன்றிய அரசு குறியாக உள்ளது; மோசமான சாலைகளில் பயணிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம்” என்று குற்றம் சாட்டினார். தண்ணீரை இலவசமாக  வழங்க வேண்டும் “இலவசமாக வழங்கப் பட்டு வந்த தண்ணீர், உலக அளவில் வியாபாரப் பொரு ளாக மாறிவிட்டது.

அதற்கு இந்தியாவும் தமிழகமும் விதிவிலக்கல்ல” என்று கூறிய பெ. சண்முகம், “தமிழகத்தில் வெப்பநிலை கடுமையாக உயரும் என  இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இத னால், வெயில் கொடுமை யிலிருந்து பறவைகளைப் பாதுகாக்க அவற்றிற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்; இது நல்ல அம்சம்” என்று பாராட்டினார். அத்துடன், “தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க  அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. கோடையைச் சமாளிக்க மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமை இருக்கக் கூடாது. அனைவருக்கும் இலவசமாக, போதுமான அளவிற்கு தண்ணீர் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார். நீர் - மோர்ப் பந்தல் திறப்பு முன்னதாக, மதுரை தியாகிகள் நினைவாக, கோடை வெயில் தாக்கத்தி லிருந்து பொதுமக்களை ஆசுவாசப்படுத்தும் வித மாக வில்லாபுரத்தில் நீர் - மோர்ப் பந்தல் அமைக்கப் பட்டிருந்தது அதனை மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் திறந்துவைத்தார்.