மதுரை, டிச.31- இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேர் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானமற்ற செயல் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள்65 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியதாவது: மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானமற்ற செயல். மீனவர்களை தனிமைப் படுத்தி கொரோனா பரிசோதனை செய்திருக்கலாம். கைது செய்யும் மீனவர்களை கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்து வதை உறுதி செய்ய வேண்டும். பொங்கலுக்கு முன்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இலங்கைக் கடற்படை பிடியில் உள்ள மீனவர்கள், அவர் களது குடும்பத்தினருடன் தொலை பேசியில் பேச ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.