அமராவதி நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தென் மாநிலங்களின் சென்னை, பெங்களூரு, திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு இடையே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வியாழனன்று காலை புதுச்சேரி - ஆந்திரா மாநிலத்தின் நெல்லூ ருக்கு அருகே கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி, தமிழ்நாட்டின் சென்னை, செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான அளவில் மழையும், ஆந்திராவின் திருப்பதி, நெல்லூர், சித்தூர், பிரகாசம், கடப்பா ஆகிய மாவட்டங்களில் அதீத அளவில் கனமழையும் புரட்டியெடுத்தது. இதில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் கனமழையால் உருக்குலைந்து இயல்புநிலையை இழந்துள்ளன. ஆந்திர அரசின் அலட்சியம் காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 24 மணிநேரத்திற்கு முன்பாகவே அறி வித்துவிட்டது. ஆனால் பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடந்த பின்னர் மீட்புப் பணியில் ஈடு பட்டு வருவது அம்மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்ற ழுத்த தாழ்வு நிலை கனமழை காரணமாக திருப்பதி, சித்தூர், நெல்லூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு வியாழனன்று விடுமுறை அளிக்கப் பட்டது மற்றும் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்ததே ஆந்திர அரசின் முன்னெச்சரிக்கை நட வடிக்கை ஆகும்.
தமிழ்நாடு அரசிடம், ஆந்திர பாஜக கூட்டணி அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் ஆகிய இரண்டும் ஒன்று தான். இரண்டும் எந்த பக்கம் கரையை கடக்கும் என திடமாக கணிக்க முடியாது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பல்வேறு பிரம்மாண்ட தொழில்நுட்பங்கள் இருந்தாலும் புயலின் கண் பகுதி தெரிந்தும், புயல் கரையை கடக்கும் இடம் கணிக்க முடியாத சூழலே நீடிக்கிறது. வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாட்டுப் பகுதியில் கரையைக் கடக்கவில்லை என்றாலும், கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியது. இதனால் அதீத அளவில் கனமழை பெய்யாவிட்டாலும் மிதமான மழையில் இருந்து சென்னை மாநகரம், புறநகர், வேளச்சேரி மண்டலம் மழைநீரில் மூழ்காமல் தப்பியது. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலை தங்கள் மாநிலத்தின் பக்கம் திரும்பும் என்ற அறிவிப்பை வழக்கம் போல ஆந்திர அரசு அலட்சியப்படுத்தியதால், திருப்பதி, நெல்லூர், சித்தூர், பிரகாசம், கடப்பா ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. ஏற்கெனவே வானிலை அறிக்கையை கண்டுகொள்ளாமல் ஆந்திர அரசு அலட்சியமாக செயல்பட்டதால் விஜயவாடா தீவாக மாறி உருக்குலைந்தது. தற்போதும் அதேஅலட்சியத்தால் 5 மாவட்டங்கள் கனமழையால் பல்வேறு சேதங்களை எதிர்கொண்டுள்ளன. இதனால் தமிழ்நாடு அரசிடம் ஆந்திர பாஜக கூட்டணி அரசு பாடம் கற்கவேண்டும்.