தேசிய நீர் விருதுகளை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அறி வித்தார். சிறந்த மாநிலங்கள் பிரிவில் உத்த ரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை , திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக ளுக்கான எழுத்து தேர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடை பெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாள் வீட்டு தனிமை கட்டாயம் என ஒன்றிய அரசு புதிய உத்தரவு ஒன்றை வெள்ளி யன்று பிறப்பித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக நியாய விலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவ தற்கான எப்சிஆர்ஏ (FCRA) உரிமத்தைப் புதுப்பிக்காததால் திருமலை திருப்பதி தேவஸ்தானம், சீரடி சாய்பாபா சன்ஸ்தான், ராமகிருஷ்ணா மடம் ஆகிய ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திற்கு முதன் முறையாக ஒரு பெண் நீதிபதி நியமிக்கப் பட்டிருக்கிறார்.
அரசிடம் பதிவுசெய்துள்ள ஸ்டார்ட்அப் நிறு வனங்கள் நாட்டில் 6.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் அனுராக் ஜெயின் தெரி வித்தார்.
நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ரயில்வே நிலையங்களில் “மொபைல் போன் ரீசார்ஜ்” செய்தல், மின் கட்டணம் செலுத்து தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று ரயில்வே தெரிவித்துள்ளது.