tamilnadu

img

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் முடி தானம் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி, ஜுலை 16- தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் முடி தானம் விழிப்புணர்வு பேரணியை பொது மேலாளர் அசோக்குமார் துவக்கி  வைத்தார். தூத்துக்குடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை இழந்த  பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத் தும் வகையில் முடி தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கார் மூலம் பெண்கள் மட்டுமே சென்று  விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. தூத்துக்குடியில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் கிளை அமைப்பாக செயல்பட்டு வரும்  பியர்ல் சிட்டி குயின் பீஸ் என்கிற மகளிர்  மட்டும் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து  வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியுடன் இணைந்து பியர்ல் சிட்டி  குயின் பீஸ் அமைப்பு தலைவர் மது மிதா தலைமையில் 20 மகளிர் பங்கேற்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டு தலை  முடியை இழந்து வீட்டிலேயே முடங்கி  கிடக்கும் பெண்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக அந்த பெண்க ளுக்கு முடியை தானமாக வழங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு கார் பயணம் தூத்துக்குடியில் இருந்து செவ்வாயன்று துவங்கியது இந்த விழிப்புணர்வு கார் பயணம்  தூத்துக்குடியில் இருந்து இன்று  துவங்கி திருநெல்வேலி, கன்னியா குமரி, விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த  விழிப்புணர்வு கார் பயணத்தை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி  பொது மேலாளர் அசோக் குமார்  துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டிஎஸ்எப் டைரக்டர் சந்திரா பிஎஸ்டிஎஸ்  ஷிப்பிங் சர்வீஸ் அர்ஜுன் சங்கர் ஜே சி ஐ தலைவர் பாலா நிர்வாகிகள்  ஜெயபால் சுப்புராஜ் ஏராளமானோர் கலந்து கொண்டு பெண்களின் முயற்சியை பாராட்டினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைவர் மதுமிதா, திட்ட தலைவர் அஜிதா பிரபுஉடனடி முன்னாள் தலை வர் வழக்கறிஞர் சுபாஷிணி, துணை தலைவர் சத்யா, பட்டைய தலைவர் ஜெர்லின்,  டைரக்டர் ஆயிஷா, செய லாளர் லோ லோபன் சினா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.