நிறைசூழ் பெண்ணொருத்தி தன்னை வருத்திக் கொண்டு இப்பூவுலகிற்கு ஒரு புதுஉயிரைப் பரிச ளிப்பதைப் போல நிறம் கருத்த மேகங்கள் சட்டென உடைந்து மழைத் துளிகளைப் பிரசவித்தது. வீட்டின் வயதுமூத்த பெருங்கிழவி ஒருத்தி அவ் வுயிரை தன் கைகளால் அள்ளி எடுத்து அரவணைத்துக் கொள்வதுபோல் இந்நிலம் ஏந்திக் கொள்கிறது மழை யின் பரிபூரணத்தை. மழை பெய்ததும் அந்நிலம் தன்னைக் கொஞ்சம் நெகிழ்த்திக் கொள்கிறது. அதுவரை இருந்த இறுக்கம் தளர்த்தி அது தன்னை புரட்டிக் கொண்டு மேலெழுகிறது. தன் மகிழ்ச்சியை மண்வாசமாய் பரவ விடுகிறது அவ்வேளையில் நாம் வாழும் இந்நிலம்.
அக்டோபர் 2 அன்று மழையும் நிலமும் இயற்கையின் அற்புத விளை யாட்டை நிகழ்த்திக் கொண்டிருந்த அவ்வேளையில், மகத்தான எழுத்தா ளர் கு. அழகிரிசாமி அவர்களின் நூற்றா ண்டுத் தொடக்க விழாவினை ஒட்டி அவி நாசி தமுஎகச கிளை சார்பாக நடை பெற்ற நிகழ்வு மனதில் நின்றது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக சில மணித்துளிகள் இடைவெளி விட்டது மழை. அதற்குள் நிரம்பிவிட்ட னர் மனிதர்கள் அரங்கிற்குள். மழை யின் தாளத்தோடு இசைந்து உடு மலை துரையரசன் குழுவினர் தங்க ளின் மக்களிசைப் பாடல்களால் வந்திரு ந்தவர்களை தன்வசப்படுத்தினர். அவிநாசி அரசுக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்துறைத் தலைவர் பேரா. போ. மணிவண்ணன்,
“பாவம் இவர்களுக்குப் படிக்கப் பிடிக்கும் பள்ளிக்கூடம்தான்பிடிக்காது” என்கிற வரியை பேசு பொருளாக்கினார். குழந்தைகளுக்கு இலக்கியத்தினை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டினார். நிகழ்வின் ஒருபகுதியாக தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் க.சம்பத்குமாரின் முதல் நூலான “பற வையின் சிறகொன்றைப் பரிசளிக்கும் காற்று” என்கிற கவிதை நூலை தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வ ரன் வெளியிட சூழலியல் எழுத்தாளர் மற்றும் கவிஞருமான கோவை சதா சிவம் பெற்றுக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். குழந்தைகளுக்கும் பொம்மைகளுக்குமான உறவு குறித்து அவர் குறிப்பிட்ட விதம் அக்கவிதை நூலுக்கு நல்ல அறிமுக மாக இருந்தது. நூலாசிரியர் தனது ஏற்புரையில் வாசிப்பே தன்னை கவிதை எழுதுவோனாக மாற்றியது என்பதோடு ஆன்மீகச் சிந்தனையைக் காட்டிலும் சமூகம் சார்ந்த செயல்பாடு களே இன்றைய அவசியம் என்பதை தான் உணர்ந்து கொண்டதாக அவரது கவிதை வரிகளைக் கொண்டே உணர்த்தினார்.
நிகழ்வின் இரண்டாம் அத்தியாய மான “கு. அழகிரிசாமியின் எழுத்துப் பயணம்” என்கிற தலைப்பிலான கருத்த ரங்க உரையை கவிஞர் நந்தலாலா நல்வினார். இந்திய சுதந்திரப் போராட்ட த்தில் அன்றைய இளைஞர்களின் பயணம் என்பது ஒருபுறம் தேசத்தின் மீதான பற்றாக இருந்தாலும் மறு புறம் மதத்தின் மீதான ஈர்ப்பாகவும் இருந்ததை சுட்டிக் காட்டினார். பகத்சிங் இவர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டவர் என்பதையும் சுதந்தி ரத்திற்குப்பின் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தனித்த பார்வையோடு செயல்பட பொது உடைமை இயக்கங் களும் திராவிட இயக்கங்களும் தொடர்ந்து அறிவுப்புலத்தில் செயல் பட்டமையே காரணம் என்பதை பல நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டி விளக்கினார்.
கரிசல் இலக்கியப் பிதாமகர் கி.ராஜ நாராயணனுக்கும் கு. அழகிரிசாமிக் கும் உள்ள நட்பு குறித்தும் அவர்களு க்கிடையே நிகழ்ந்த கடித உரை யாடல்கள் எவ்வாறு இலக்கியமாக மிளிர்ந்தன என்பதையும் நயமாக உணர்த்தினார். ஒருவரின் வாழும் சூழல் அவர்களின் எழுத்தில் பிரதி பலிக்கும் என்பதை கு. அழகிரிசாமியின் கதைகளைக் கொண்டு பேசியபோது அரங்கு அக்கதைகளுக்குள் பயணி க்கத் தொடங்கியதை உணர முடிந்தது. கு. அழகிரிசாமி யார் என்றே தெரியா மல் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வர்கள் அதிகம். இனி அவர்களை நந்த லாலா சொல்லிய “ராஜா. வந்திருக் கிறார், குமாரபுரம் ஸ்டேசன்” போன்ற கதைகளே தேடி கண்டடையச்செய்யும் என்கிற நம்பிக்கை எழுந்தது. கு. அழகிரிசாமி அவர்களின் சிறு கதைகளை மட்டுமே அறிந்திருந்த வர்களுக்கு அவரின் பல்வகைப்பட்ட இலக்கியப் பணிகளைக் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடை த்தது. காந்தியடிகளின் எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கு. அழகிரிசாமி என்பதும் பல நூற்றாண்டு கள் பழமையான தனிப்பாடல்களை தேடித் தொகுத்தவர் கு. அழகிரிசாமி என்பதும் புதிய தகவல்களாக இருந்தன. நான்காயிரத்துக்கும் மேற் பட்ட தனிப்பாடல்களில் நானூறு பாடல் களை மட்டும் தேர்வு செய்து அதில் பகுதிப்பாடல்களை மட்டும் நூலாக பதிப்பித்தவர் கு. அழகிரிசாமி. ஆனால் அந்நூல் இன்னமும் இரண்டாம் பதிப்பு காண முடியவில்லை என்பது தமிழ் குறித்த வெற்றுப் பெருமிதங்களுக்குப் பின்னுள்ள நமது பலவீனங்களை சுட்டிக் காட்டுகிறது எனக்கூறி நிறைவு செய்தார் நந்தலாலா.
அ. சுசீலா