tamilnadu

நான்கரை ஆண்டுகளில் குஜராத்தில் ரூ.32,310 கோடிக்கு ஜி.எஸ்.டி மோசடி

 காந்திநகர்,பிப்.13- 2021 டிசம்பர் வரை 1,875 போலி நிறுவனங் களின் போலி ரசீதுகள் மூலம் 32,310கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்திருப்பதாக கண்டறிந்துள்ள அதிகாரிகள், இதன்மூலம் ரூ. 4,262 கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டிருப்ப தாகவும் மோசடியான உள்ளீட்டு வரி வரவு கோரிக்கை மூலம் அரசின் கஜானா காலியானதாகவும் தெரிவித்துள்ளனர். வணிக நிறுவனங்களின் இருப்பு குறித்த முகவரி சரிபார்ப்பு ஏதும் இல்லாமல் ஜி.எஸ்.டி. பதிவு களை வழங்கும் செயல்முறையில் 2020 டிசம்பரில் கொள்கை மாற்றம்செய்யப்பட்டது. இருப்பினும், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முகவரி சரிபார்ப்பு என்பது இயலாத காரியமாக உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, மாநில அதிகாரிகளால் சுமார் 1,172 போலி பில்லிங் வழக்கு கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுமுந்தைய மூன்று ஆண்டுகளின் எண்ணிக்கையை விட (2018-19, 2019-20, மற்றும் 2020-21) 67 சதவீதம்  அதிகரிப்பைக் காட்டுகிறது என்று எஸ்ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். “சோதனைச்சாவடிகள் மற்றும் சுங்கச் சாவடிகளில் சுமார் 39 நடமாடும் குழுக்கள் சமீபத்தில் நிலைநிறுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு இடையே யான சரக்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றது.வரிஏய்ப்பு சாத்தியம் உள்ள பொருட்கள் மீது உன்னிப்பாகக் கண்காணித்து வரும் இந்தகுழுவிற்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்று  செயல்பட்டு வருகிறது” என்று மாநில வணிக வரி ஆணையர் மிலிந்த் டோர்வானே கூறியுள்ளார்.