tamilnadu

img

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பதில் அரசு தீவிரம்

சென்னை, ஆக.6- தமிழ்நாட்டின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொரு ளாதார வளர்ச்சி, தொழில் சார் சிந்தனைகளுக்கு ஏற்ப,  தமிழ்நாடு அரசு தனித்துவ மான “மாநிலக் கல்விக்  கொள்கை” வடிவமைப்ப தில் தீவிரமாக செயலாற்றி வருகிறது என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித் தார். சென்னை பல்கலைக் கழகத்தின் 165வது பட்ட மளிப்பு விழா கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்க ளுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு கவுரவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்.என்.ரவி,  உயர்கல்வித்துறை அமைச் சர் க. பொன்முடி உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். இந்த விழாவில் முதலமைச்சர் பேசுகை யில், “தனித்துவமான கல்வி  கொள்கையை வகுப்பதில் தமிழ்நாடு அரசு  முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல சிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை சென்னை பல் கலைக்கழகத்திற்கு உண்டு” என்றார் இந்தியாவில் தலை சிறந்த 100 பல்கலைக் கழகங்கள் 20க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியி யல் கல்லூரிகளில் 35 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ் நாட்டில் உள்ளன. தலை சிறந்த 40 மருத்துவக்கல் லூரிகளில் 9 தமிழ்நாட்டில் உள்ளது என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.

“பாலின சமத்துவத் திற்கான கோயில்” 

அதனைத் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, “ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். சர் சி.வி. ராமன், சந்திரசேகர் உள் ளிட்ட விஞ்ஞானிகளும் இங்கு படித்தவர்களே. பாலின சமத்துவத்திற்கான கோயிலாகச் சென்னை பல்கலைக்கழகம் திகழ் கிறது”என்றார். வளமான கலாச்சாரம், நாகரீகம் கொண்டது தமிழ்நாடு; கோயில் கட்டிடக்  கலை, சிற்பக்கலை மனிதக் குலத்தின் திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.