tamilnadu

img

பேராசிரியர்கள் பற்றாக்குறையால் தத்தளிக்கும் அரசு மருந்தியல் கல்லூரிகள்

பேராசிரியர்கள் பற்றாக்குறையால்  தத்தளிக்கும் அரசு மருந்தியல் கல்லூரிகள்

சென்னை, செப்.21- தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் படிப்புகளுக் கான தனிக் கல்லூரிகள் இயங்கு கின்றன. இந்த மருந்தியல் கல்லூரி களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இந்திய மருந்தாளுநர்கள் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடந்த மாதம் ஒரு புகார் கடிதத்தை அனுப்பியது. அதன்படி, இந்த நான்கு கல்லூரி களில் ஒன்றில்கூட முழுநேர முதல்வர் இல்லை. அந்தந்த மருத்துவக் கல்லூரி களின் முதல்வர்களே மருந்தியல் கல்லூரி களின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். இந்த மருந்தியல் கல்லூரி களில் மொத்தமாக உள்ள ஒன்பது பேரா சிரியர் பணியிடங்களில் ஏழு இடங்களும், 18  இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 17 இடங்களும் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள மருந்தியல் கல்லூ ரிக்கு ஒதுக்கப்பட்ட நான்கு பேராசிரியர் பணி யிடங்களில் இரண்டு பணியிடங்கள் காலி யாக உள்ளன. மதுரை மருந்தியல் கல்லூரிக்கு  ஒதுக்கப்பட்ட மூன்று பேராசிரியர் பணி யிடங்களிலும் இரண்டு பணியிடங்கள் காலி யாக உள்ளன. கோவை, தஞ்சாவூர் மருந்தி யல் கல்லூரிகளில் பேராசிரியர்களே இல்லை. ஆக, நான்கு அரசு மருந்தியல் கல்லூரி களில் மொத்தமாக மூன்று பேராசிரியர்களும் ஒரு இணைப் பேராசிரியரும் மட்டுமே பணி யாற்றுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக  இந்த நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் இந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மருந்துகள் சார்ந்த நிபுணத்துவம் பெற்ற வர்களே மருந்தாளுநர்கள். சரியான மருந்து களை வழங்குதல், பக்க விளைவுகளை கண்காணித்தல் மற்றும் மருந்து பிழைகளை  தடுப்பதன் மூலம் பொது சுகாதாரத்திற்கு அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். இதன் முக்கியத்துவம் கருதிதான் தமிழ்நாட்டில் பி.ஃபார்ம், எம்.ஃபார்ம் உள்ளிட்ட மருந்தி யல் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்  படிப்புகளுக்கென்று தனி கல்லூரி களை அரசு உருவாக்கியது. ஆனால் ஒட்டுமொத்த மாநிலத்துக்கு  நான்கு அரசு கல்லூரிகளே உள்ளன. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருந்தியல் கல்லூரிகள் எதுவும் புதிதாகத் திறக்கப்படவில்லை. மறுபுறம், 110 தனியார் மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் பத்து தனி யார் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப் படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஆண்டுக்கு இரண்டு லட்ச ருபாய் வரை கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை,  நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு மருந்தியல்  படிப்பு எட்டாக்கனி ஆகிக் கொண்டிருப்ப தாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரி விக்கின்றனர். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடி யாகத் தலையிட்டு மருந்தியல் கல்லூரி களில் உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங் களையும் விரைவாக நிரப்ப வேண்டும். மாண வர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். புதிய கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று  மருத்துவ துறைசார் நிபுணர்களும் சமூக  செயற்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்ற னர்.