கோயம்புத்தூர். மே 5 – பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளை 40 ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலை யில் இழப்பீடு கொடு, இல்லையேல் எங்கள் நிலத்தை எங்களுக்கே கொடு என்கிற முழக்கத்து டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகள் வழங்கினர். நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு பல்கலைக்கழகத்திற்கு ள்ளேயே வேலை என்கிற உறுதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த உறுதிமொழியை ஏற்று நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அரசு கொடுத்த எந்த உறுதியையும் நிறைவேற்றவில்லை. மேலும் ஒரு சென்ட் நிலம் வெறும் 2 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றம் சென்ற னர். இதனையடுத்து ஒரு சென்ட் 3 ஆயிரத்து 300 ரூபாய் என்கிற அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு வழங்கி யது. ஆனால் 30 ஆண்டுகள் கடந்து விட்டபோதி லும், தற்போதுவரை விவசாயிகளுக்கான உரிய இழப்பீடு வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இப்பிரச்சனையை கண்டு கொள்ளாத நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக அரசு பொறுப் பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலை யில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் விவசாயிகள் பலமுறை நினைவூட்டல், கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தி முறையிட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து நிலத்திற்கான இழப்பீடு கொடு அல்லது எங்களது நிலத்தை எங்களுக்கே கொடு என்கிற முழக்கத்துடன் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைமையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரதியார் பல்கலைக் கழகத்தில் மே 5 ஆம் தேதியன்று குடியேறும் போராட்டத்தை அறிவித்தனர். இதனையடுத்து வியாழனன்று பல்கலை. வாயில் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், போலீசாரின் அனைத்து அச்சுறுத்தலையும் மீறி நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல்கலைக் கழகம் முன்பு திரண்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் விவசாயிகள் பல்கலைக் கழக த்திற்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி., உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் அல்லது அவருக்கு இணையான அதிகாரிகள் வந்து உறுதிகொடுக் காமல் கலைந்து செல்லமாட்டோம் என உறுதி பட தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி.யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், உடனடியாக வருவாய் கோட்டாட்சியரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், மாலை நேரடியாக விவசாயிகளுடன் பேசி தீர்வை ஏற்படுத்தவும் உறுதியளிப்பதாக தெரிவித்தார். இதனடிப் படையில் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜூன் 15 ஆம் தேதிக்குள் நிலம் கொடுத்தோருக்கான இழப்பீடு தொடர்பாக உரிய தீர்வை ஏற்படுத்தாவிட்டால் மீண்டும் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட் ட்டத்தில் ஈடுபடுவோம் என கோட்டாட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., எச்சரித்தார். மேலும் மாலை மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது என முடிவெடுக்கப்பட்டு தற்காலிகமாக குடியேறும் போராட்டத்தை ஒத்திவைத்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழ னிச்சாமி, பொருளாளர் கே.தங்கவேல், ஒன்றிய செயலாளர் காளப்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் கருப்பையா, வி.மணி, என்.ஆறுச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.