tamilnadu

img

கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

நாகை மாலி எம்எல்ஏ வலியுறுத்தல்

நாகை மாலி எம்எல்ஏ வலியுறுத்தல் சென்னை, அக். 6 - மந்திரா நிறுவனத்தின் அடாவடி களை தடுக்கக் கோரி திங்களன்று சென்னையில் கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அரசு கேபிள் டிவி நிறுவன போர் வையில், மந்திரா நிறுவனத்தின் அடா வடியை தடுத்து நிறுத்த வேண்டும்.  அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் மந்திரா நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதையும், பல ஆண்டு களாக தேங்கி கிடக்கும் செட் டாப் பாக்ஸ்களை வாங்கவும், நல்ல நிலையில் உள்ள பாக்ஸ்களை மாற்றவும் நிர்பந்திப்பதை தடுக்க வேண்டும். இதற்கு துணைபோகும் வாரிய தலைவர், அரசு கேபிள் டிவி தாசில் தார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே தொழில் நடத்தி வரும் இடங்களில் புதிய வர்களுக்கு ஒளிபரப்பு (எல்சிஓ) உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும். கேபிள் டிவிக்கு விதிக்கப் பட்டிருக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி-யை  ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.  கேபிள் டிவி வாரியத்தில், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்- களைத்தான் பொருத்த வேண்டு மென்று நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு கேபிள்  டிவி அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டத்தை தமிழக கேபிள்  டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் அறிவித்தது. இதன்படி, ஆபரேட்டர்கள் எழும் பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே  ஒன்றுகூடினர். சங்கத்தின் தலைவர் சுப.வெள்ளைச்சாமி தலைமையில் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய நாகைமாலி, “ஆட்சி  மாறியும் காட்சி மாறாத நிலை உள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவ னத்தின் போர்வையில் தனியார் நிறு வனம் அராஜகம் செய்வதையும், அதற்கு அதிகாரிகள் துணையாக இருப்பதையும் அனுமதிக்க முடி யாது. ஆபரேட்டர்களின் கோரிக்கை களை புரிந்து கொண்டு அமைச்சர்  நிறைவேற்ற வேண்டும். ஆபரேட்டர் களின் கோரிக்கைகளை சட்டமன்றத் தில் எழுப்புவோம். முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச மார்க்சிஸ்ட்  கட்சி நடவடிக்கை எடுக்கும்” என்றார். இந்நிலையில் அரசு கேபிள் டிவி  மேலாண்மை இயக்குநர் வைத்திய நாதன் தலைமை செயலகத்தில் சங்கத் தின் தலைவர் சுப.வெள்ளைச்சாமி, பொதுச் செயலாளர் எஸ்.ராதா கிருஷ்ணன், பொருளாளர் ஆர். கோவர்தனன், துணைத் தலைவர் கள் பி.ஆர்.தணிகைவேல், ஜி.தா மோதரன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன்பின் பேசிய சுப.வெள்ளைச் சாமி, “முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த அனு மதி கோரி 4 மாதமாக காத்திருக் கிறோம். அனுமதி கிடைக்காத நிலை யில் இந்த போராட்டம் நடைபெறு கிறது. இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதிதாக ஒளி பரப்பு உரிமம் (எல்சிஓ) வழங்க  மாட்டோம் என்று உறுதியளித் துள்ளார். அக்.8 அன்று முதலமைச் சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் பெ.சண்முக மும், நாகை மாலி எம்எல்ஏவும் உறுதி  அளித்துள்ளனர். இதனடிப்படை யில் முற்றுகை போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக நடத்துகிறோம்” என்றார்.