புகைப்படக் கலைஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
துக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி சிஎன்சி மகாலில் புகைப்பட கலைஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேசன் அறந்தாங்கி மண்டலம் மற்றும் சூர்யா ஹெல்த் மருத்துவமனை இணைந்து புகைப்பட கலைஞர்களுக்கு 70 வகையான இலவச மருத்துவ பரிசோதனையை நடத்தியது. 50 பேருக்கு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.எஸ். சுதர்சன் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் என்கிற அமீர்கான், செயலாளர் செல்வா என்கிற செல்வராஜ், பொருளாளர் பி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு தனியார்
துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
மே 14 இல் மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, ஏப்.22- புதுக்கோட்டை குளத்தூர் வட்டம், அண்டக்குளம் வருவாய் கிராமத்தில் மே மாதம் 14 அன்று அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் “மக்கள் தொடர்பு முகாம்” நடைபெறவுள்ளது. இம்முகாமை முன்னிட்டு ஏப்.22 முதல் பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள், அண்டக்குளம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பெறப்படவுள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி இணையவழியில் ரூ.35,113 பறித்த 3 பேர் கைது
தஞ்சாவூர், ஏப்.22- கைப்பேசி மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, ரூ.35 ஆயிரத்து 113 ரொக்கத்தை பறித்த 3 பேரை, காவல் துறையினர் திங்கட்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன். இவரது மூத்த மகன் திவாகர் சிரமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் சுந்தர் 7 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் 2024, அக்டோபர் 26 ஆம் தேதி திவாகருக்கு பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பேசுவதாகவும், கல்வி உதவித்தொகை ரூ.14 ஆயிரம் வந்திருப்பதாகவும் கூறி, ஜி.பே மூலம் ரூ.35 ஆயிரத்து 113 பறித்தனர். இதுகுறித்து, ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட சைபர் குற்றக் காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவம் தொடர்பாக தில்லியை சேர்ந்த அசுகுமார் (30), சபம் குமார் (22), அனுஜ்குமார் (22) ஆகியோரை கைது செய்து, தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்து, 3 பேரையும் கைது செய்த தஞ்சாவூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரோஸ்லின் அந்தோணியம்மாள், திருச்சி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினரை, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாராட்டினார்.