tamilnadu

img

ஹவுராவில் வழக்கறிஞர் சங்க அகில இந்திய மாநாடு

ஹவுரா, டிச. 29 -  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (AILU) 14-ஆவது அகில இந்திய மாநாடு மேற்குவங்க மாநிலம்,  ஹவுரா நகரில் (நரா நாராயாணா நகரில்) அசோக் பக்‌ஷி அரங்கத்தில் டிசம்பர் 28- 30 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.  டிசம்பர் 28 அன்று துவங்கிய இந்த மாநாட்டில் இந்திய முழு வதிலும் இருந்து மேற்பட்ட வழக்கறி ஞர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.   மூன்று நாள் நடைபெறும் இந்த  மாநாடு டிசம்பர் 30 அன்று நிறைவாக பொதுக் கூட்டத்துடன் முடிவடைகிறது. “வகுப்புவாதத்தை தோற்கடிப்போம், ஜனநாயகத்தை காப்போம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” என்பதை கருப்பொருளாக கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில், வர வேற்புக்குழு தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி பிரதிநிதிகளை வரவேற்று உரையாற்றினார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  பிரதிநிதிகள் மாநாட்டை சங்கத்தின் தலைவர் மூத்த வழக்கறி ஞரும், மாநிலங்களவை உறுப்பினரு மான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரி யா தலைமை உரையாற்றினார். ஸ்தாபனம் மற்றும் வேலை அறிக்கை யை முன் வைத்து, சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் பி.வி. சுரேந்திர நாத் உரையாற்றினார். பிரதிநிதிகள் மாநாட்டு விவா தத்தில் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசின் செயல்கள் குறித்தும், தற்போது மாற்றப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் குறித்தும், பாசிசத்திற்கு எதிராக வழக்கறிஞர்களின் பங்கு குறித்தும்,  இந்திய முழுவதும் சங்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் சங்கத்தை வலுப்படுத்து வது குறித்தும் மாநாட்டில் விவாதங்கள் நடத்தப்பட்டன.