திருவண்ணாமலை, அக்.22- திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலையில் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்ட பழங்குடி யின மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடி மக்கள் சுமார் 49,400 ஹெக்டேர் வன நிலத்தில் விளையும் பொருட்களை சேகரித்துக்கொள்ளும் உரிமை யைப் பெறுகின்றனர். 2006-ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா மரத்தூர் தாலுகாவில் தகுதி யுள்ள அனைவருக்கும் விடுத லின்றி வன உரிமை பாத்தியம் அளிக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் போது 165 பேருக்கு மட்டும் தனிநபர் வன உரிமைப் பாத்தியம் அளிக்கப்பட்டிருந்தது. சமூக வன உரிமைப் பாத்தியம் அளிக்கப்படவில்லை. இதை யடுத்து ஜமுனாமரத்தூர் தாலு காவில் தகுதியுள்ள அனை வருக்கும் விடுதலின்றி வன உரிமைப் பாத்தியம் அளிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமூக மற்றும் தனி நபர் வன உரிமைப் பாத்தியத் திற்கான சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமையேற்று 89 கிராமங்களுக்கான சமூக வன உரிமை பாத்தியம் மற்றும் 102 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியத்திற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் 154 கிராமங் களை சார்ந்த வனச்சரக பகுதி யில் வாழ்ந்து வரும் பட்டியல் பழங்குடியின இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசி களுக்கு 49 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பு வன நிலத்திற்கு சமூக வன உரிமைப் பாத்தியம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த நிலங்களில் பயனாளிகள் இந்திய நெல்லிக்காய், கடுக் காய், பூந்திக்கொட்டை, புளி தேன் ஆகியவற்றை சேகரித்துக் கொள்ளலாம் என்றார். மேலும் அவர் கூறுகையில், பழங்குடியின மக்கள் மற்றும் பிற வனவாசிகளுக்கான வன உரிமைகள் குறித்து விவாதிக்க 25 மாவட்ட அளவிலான குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்யப் பட்டது. தொடர்ந்து, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர். வன உரிமைக்காக முதலில் நிரா கரிக்கப்பட்ட 568 விண்ணப் பங்கள் நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளன என்றார். வன உரிமைச் சட்டத்தின் கீழ், 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதிக்கு முன் காடுகளில் வசித்த பழங்குடியினருக்கும், 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி வரை 75 ஆண்டுகளாக (மூன்று தலைமுறைகள்) காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் அல்லா தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டத்தின் அம லாக்கத்தை மாநில அளவில் தலை மைச் செயலாளர் தலைமையி லான குழுக்கள், மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் துணைக் கோட்ட அளவில் வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.