tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணியில் அறிவியல் இயக்கத்தினர்

தூத்துக்குடி,டிச.23-  தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணப்பணியில் அறி வியல் இயக்கத்தினர் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் தூத்துக்குடி மாவட்டக்குழு  சார்பில்  பேரிடர் கால நண்பன் திட்டத்தில்  பயிற்சி பெற்ற இராம நாதபுரம் இளைஞர்கள் ,நிவாரணப் பொருட்களை தூத்துக்குடி அறிவியல் இயக்கத்தில் நேரில் வழங்கினர். அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் பேராசிரியர் செ.சுரேஷ்பாண்டி தலைமையில் வெள்ள நிவாரணப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மழைக்கால பேரிடர் உதவிக்காக மழைத்தோழி  எனும் நிவாரண உதவிமையம் துவங்கப்பட்டு ,தன்னார்வ குழுக்களி டம் நிவாரண உதவிகோரப்பட்டது. அதன்படி காயல்பட்டினம் பகுதியில் துணைத்தலைவர் ஆசிரியர்  மணிகண்டன் தலைமையில் காயல் பட்டினம்,இரத்தினகிரி ,சல்லிதிரடு, வடக்கு நல்லூர் கிராமங்களிலும், சாத்தான்குளம் பகுதியில் உமா மகேஷ்வரி தலைமையில் ஆர்.சி தெரு,அண்ணா நகர்,காந்திநகர் பகுதி யிலும்,அடைக்கலாபுரம் பள்ளி தலை மையாசிரியை சகோதரி விக்டோரியா தலைமையில் அடைக்கலாபுரம், சுற்றிய கிராமங்களிலும், ஆழ்வார் திருநகரி பகுதியில்  வானவில் மன்ற கருத்தாளர் ஜெயா தலைமையி லும்,ஆத்தூர் முகாம் பகுதியில் செயலாளர் வீரசுதாகர் தலைமை யிலும்,புதூர் பகுதியில் மாவட்ட பொரு ளாளர் கார்த்திகா குழுவினரும், விளாத்திகுளம் பகுதியில் தனலட்சுமி குழுவினரும் நிவாரணப்பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் சுடலைமணி குழுவினரும் திருவைகுண்டம், கருங்குளம் பகுதியில் துளசி கல்லூரி இயக்குநர் கௌரவத்தலைவர் பேரா சிரியர் சாந்தகுமாரி,மோகன் தலைமை யில், மாணவியர்கள் மற்றும் இராம நாதபுரம் பேரிடர் கால நண்பன் குழு வினர்  புளியங்குளம், அகரம்,முறப்ப நாடு,வல்லநாடு,அருந்ததியர் காலனி, வசவப்புரம்,அனவரதநல்லூர்,மணக்கரை,செய்துங்கநல்லூர், நாட்டார் குளம்,கருங்குளம் கிராமங்களில் 1 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணங்களை நள்ளிரவு 12.15 மணிவரை வழங்கினர்.  மேலும் புளியங்குளம் பகுதியில் வெள்ளநிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜை  நேரில் சந்தித்து மாவட்டக்குழு சார்பில் புத்தகங்கள் வழங்கி பாராட்டி சால்வை  அணிவிக்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கான காரணம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில வளர்ச்சிக்குழு சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, மாவட்ட நிர்வா கம் மற்றும் முதலமைச்சரிடம் ஆய்வ றிக்கைகள் விரைவில்  சமர்ப்பிக்கப்பட வுள்ளது குறிப்பிடத்தக்கது.