tamilnadu

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் ஐந்து பேர் சென்னை திரும்பினர் 

சென்னை, பிப். 27- உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த சில நாட்க ளாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று வரும் மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டைச் சேர்ந்த வர்களும் தங்களது நாடு களுக்கு திரும்பி வரு கின்றனர். உக்ரைனில் போது மான பாதுகாப்பு இல்லை என அங்குள்ள இந்திய மக்கள் குறிப்பிடுவதுடன், தங்களை காப்பாற்றுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து ள்ளனர். இந்நிலையில் ஞாயிற் றுக்கிழமை அதிகாலை ஹங் கேரியின் புடாபெஸ்ட் பகுதியிலிருந்து இந்தி யர்களை சுமந்துகொண்டு மேலும் ஒரு விமானம் இந்தி யாவுக்கு புறப்பட்டு காலை 9 மணியளவில் தில்லி வந்த டைந்தது. இந்த விமா னத்தில் மொத்தம் 240 பேர் வந்தனர்.

இதில் தமிழ் நாட்டை சேர்ந்த 12 பேர் இந்த விமானத்தில் வந்தனர். சென்னையைச் சேர்ந்த ஹரிஹரசுதன்,சகீர் அபுபக்கர், சேலத்தைச்  சேர்ந்த சாந்தனு பூபாலன், தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, அறந்தா ங்கியை சேர்ந்த செல்வ பிரியா ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்த டைந்தனர். தில்லி வந்தடைந்த மாணவர்கள் அங்கிருந்து இண்டிகோவிமானம் மூலம்தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுவாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணி வித்தும் வரவேற்றார்.   மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்டதும் கண்ணீர் மல்க கட்டித் தழுவினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உக்ரைனில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் உள்ளனர். அதில் 1,800 மாண வர்கள் உதவி கோரி யுள்ளனர்” என்று தெரி வித்தார்.