tamilnadu

img

ஆண்கள் கோலோச்சிய துறையில் பெண் காவலர்கள் - தொகுப்பு: அ.ர.பாபு

ஆகாயத்தில் பறக்கும் பெண்களை அடுப்பங்கரைக்குள் அடக்கும் முயற்சிகள் ஆண்டாண்டு காலமாய் நடந்தாலும், அதனையும் மீறி பெண்கள் சாதித்து வருகின்றனர். இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பை வெளிப்படுத்தினாலும், அதற்கான வாய்ப்பு வாசல்களை ஆணாதிக்க திமிர் அடைத்தே வைத்திருக்கிறது.

இது இதர துறைகளைப்போலவே காவல்  துறையிலும், மோப்பநாய் பிரிவு, ஐபிஎஸ் அதி காரிகளின் அதிவிரைவு படை, கனரக வாகன  துறை, ஆயுதப் படையின் படைக்கலன் பணி மனை ஆகியவற்றில் பெண்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட பணியில் ஆண்கள் மட்டுமே என்கிற விதியை உடைத்திருக்கிறது கோவை மாநகர காவல்துறை. அதுவும் குறிப்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வெ. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு,  இந்த நான்கு பிரிவுகளிலும் பெண்களை  நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆண்  காவலர்கள் மட்டுமே கோலோச்சிக்கொண்டி ருந்த பல இடங்களில் பெண் காவலர்கள்  பணியில் அமர்த்தப்பட்டதால் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டிலேயே முதல்  முறையாக காவல்துறையின் பராமரிப்பில் உள்ள துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யும் படைக்கல பணிமனையில் 2 பெண் காவலர்களை பணி யமர்த்தியுள்ளது கோவை மாநகர காவல் துறை.

அவற்றில் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் (Striking force) என்னும் அதிவிரைவுப் படை யில் தன்னுடைய குழுவில் இரு பெண்களை யும், மோப்பநாய் பிரிவில் இரண்டு இளம்  பெண் காவலர்களையும் நியமித்த நிலையில்  வெற்றிகரமாக பணியாற்றி வருகின்றனர். அதேசமயம் தனித்துவமான துறையான படைக்கலன் பணிமனையில் அனுபவ மிக்க இரண்டு பெண் காவலர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். பொள்ளாச்சியைச் சேர்ந்த இந்துமதி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெப சீலா ஆகியோர் படைக்கல பணிமனையில் சேர்ந்து வெற்றிகரமாக பங்காற்றி வருகின்ற னர். 2008 - 2009 ஆம் ஆண்டு முதல் இந்த பெண்கள் தமிழ்நாடு காவல்துறையில் பணி யாற்றி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை யில் பெண்கள் இணைந்து 50 ஆண்டு களை கொண்டாடும் வகையில் அனைத்து துறைகளிலும் பெண்களை சேர்க்க, விருப்ப முள்ளவர்கள் படைக்கல பணிமனையில் சேர  விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆர்வத்துடன் விண்ணப்பித்த இரு வரையும் அப்பணியில் அமர்த்தினார் மாநகர  காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன். 

கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்  டில் மட்டும் சிறிய ரகம் முதல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கிகள் வரை  சுமார் 1,700 ஆயுதங்கள் உள்ளன. இவற்றை  மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படை யில் முறையாக பராமரிப்பது, பழுதடையும் போது சரி செய்து கொடுப்பது போன்றவை  படைக்கல பணிமனையின் பொறுப்பு. இத்த கைய சிறப்புமிக்க துறையில் பணிபுரிவது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்ப தாக கூறுகின்றார் இந்துமதி.  வழக்கமான காவல் பணியில் இருக்கும் போது தங்களுக்கு கொடுக்கப்படும் குறிப்  பிட்ட துப்பாக்கியை மட்டுமே பயன்படுத்தி  வந்தோம். தற்போது, தங்களுக்கு துப்பாக்கி கள் செயல்படும் தொழில்நுட்பம் முதல், அனைத்து வகை துப்பாக்கிகளையும் எடுத்து  பணி செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெரு மிதமாக இருக்கிறது என்கிறார் ஜெபசீலா.  ஏற்கனவே தமிழ்நாட்டில் முதன்முறை யாக கோவை மாநகர காவல்துறையில் உள்ள  மோப்ப நாய் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த கவிப்பிரியா (25), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பவானி (26) ஆகிய இரண்டு பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணி யாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: அ.ர.பாபு