திருவனந்தபுரம், ஏப்.18- திருவனந்தபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஒரு பகு தியாக முடிக்கப்பட்ட பல்வேறு திட் டங்களை முதல்வர் பினராயி விஜயன் புதனன்று (ஏப்.19) மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார். நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யும் நோக்கில், மாநில சுகாதாரத் துறையால் செயல்படுத்தப் படும் முக்கியமான திட்டங்களையும் முதல்வர் துவக்கி வைக்கிறார். லீனியர் ஆக்சிலரேட்டர் (லினாக்-ரூ.18 கோடி), விரிவான ஸ்ட்ரோக் யூனிட் மற்றும் கேத் லேப் (ரூ.14.03 கோடி), பர்ன்ஸ் ஐசியூ (ரூ.3.4 கோடி), இண்டர்வென்ஷனல் நுரையீரல் பிரிவு (ரூ.1.10 கோடி) மற்றும் எம்எல்டி பிளாக் (ரூ.16 கோடி) ஆகியவை திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தி னராக கடகம்பள்ளி சுரேந்திரன் எம்.எல்.ஏ.பங்கேற்கிறார். இத்திட்டங்கள் செயல்பட்டதும், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை, அவசர சிகிச்சை தேவைப்படும் பக்கவாத நோயாளி களுக்கு சிறப்பு சிகிச்சை, தீக்காய பிரி வில் பல்வேறு சிகிச்சை மற்றும் சிறப்பு சுவாச சிகிச்சை கிடைக்கும். எம்.பி சசி தரூர், மேயர் ஆர்யா ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற் கின்றனர்.